Tuesday, August 21, 2007

Happy Birthday Guru :)

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் குரு வேதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுளும், குறைவில்லாத ஆரோக்கியமும், நிறைந்த அன்பும், நடுங்க விடாத செல்வமும், குற்றம் சொல்லாத சுற்றமும், தேவையில் துனை நிற்கும் நட்பும், குன்றாத சந்தோஷமும் என்றும் கிடைக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு :)

Sunday, August 05, 2007

எனக்கு பிடித்த பாடல்

Another superb melody from Illayaraja. மொக்க படமா இருந்தா கூட அதுக்கு அட்டகாசமா பாட்டு போட அவர அடிச்சிக்க ஆளே இல்லை. ஜேசுதாஸும், சித்ராவும் கரையும்...

[பார்க்க]

சொர்க்கத்தின் வாசற்படி

சித்தாரா சூப்பர் :)

[படிக்க]

[பல்லவி]

சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக்கனவுகளில்

பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக்களஞ்சியமே

சின்ன மலர்க்கொடியே
நெஞ்சில்
சிந்தும் பனித்துளியே

[சரணம் 1]

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே

ஒன்றுக்குள் ஒன்றான நீர் அலைகள்
என்றும் இரண்டல்லவே

சிற்றன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே

எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்

மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்கவாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே


[சொர்க்கத்தின் வாசற்படி...]

[சரணம் 2]

உன்னாலே நான்கொண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்

கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்

மின்சாரம் போல்எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்

கண்ணே உன் கண் என்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் வீழ்த்திடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்றுவிட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்


[சொர்க்கத்தின் வாசற்படி...]

P.S: எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

Sunday, July 29, 2007

நீங்கள் இல்லாமல்...

எலே பரணி, என்னலே blog பக்கமெல்லாம் உன் பொறந்தநாள் திருவிழா கணக்கா இருக்குது.
அட ஆமாலே, எல்லாம் நம்ம சிநேகிதக்கார புள்ளங்கதாம்லே. அசத்திபுட்டாங்க.

பாசக்கார பய புள்ளகளா இருப்பாக போல, எங்க போனாலும் ஒரே வாழ்த்து பதிவா இருக்குலே.
ஆமாலே, பதிவு, போனு, இமெயிலு, கமெண்டுன்னு திக்கு முக்காட வச்சிடாங்கலே.

குடுத்துவச்சவம்லே நீ. திரும்ப என்ன பண்ண போறம்லே?
அதாம்லே எனக்கும் தெரியல. இவ்ளோ அன்புக்கு தகுதியிருக்கான்னு தெரியலலே.

கடவுள்னு ஒருத்தர் இருந்தா, அவர் எப்பவும் இவங்க கூடவே இருந்து இவங்க எல்லாரையும் பாத்துகனும்லே.

அட கிறுக்குபயலே, இதுக்கு ஏம்லே கண்ணுல தண்ணி வக்கிறே?
எலே பக்கதில யாரோ வெங்காயம் வெட்றாங்கலே....

P.S: ஊருக்கு போயிட்டேன். அதனால் தான் நன்றி நவிலல் சற்று தாமதமாகிவிட்டது. ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்.


நீங்கள் இல்லாமல்...நான் இங்கு இல்லை...இல்லை

Tuesday, July 24, 2007

காதலும் காதல் நிமித்தமும்

1. ஒரு tagஅ ஒரு தடவை எழுதறதே ரொம்ப கஷ்டம். இப்பலாம் எல்லா tagயும் ரெண்டு தடவை எழுதறேன்.(அந்த அளவுக்கு வெட்டி இல்ல, மக்கள் அந்த அளவு பாசமா இருக்காங்க. அந்த பாசத்துக்கு நான் அடிமை).

2. குருவின் ஆணைக்கு பனிந்து(பயந்து) இந்த கவிதை tagஐ தொடருகிறேன். (குரு, வேணுன்னே வேணுன்னே தானே என்னை மாட்டி விட்டீங்க)

3. குருவின் புது விதியின் படி கவிதை கடைசியாக Dreamzzஇடம் கொடுக்கப்பட வேண்டும். (அப்பாடா நிம்மதியா இருக்கு....என்னை மட்டும் மாட்டி விட்டீங்கள்ள...நல்லா வேணும்)

4. நான் அடுத்து tag செய்வது All in All அழகுராஜா மாம்ஸ் கார்த்திக் :)

குரு நன்றே முடித்தது:

கேள்விக்கு பதில்தேடி
கோவிலின் படியேறினேன்
என் தெய்வத்தை தரிசிக்க!

இனி என் கொலை:

வரம் வேண்டி
கோவில் வந்ததுண்டு
வாழ்க்கை வேண்டி

முதல் முறை

இதயத்தின் பயன்
சுவாசிப்பது
நேசிப்பது

நேசிக்காமல்
சுவாசிக்கும்
இதயம் இருந்து
என்ன பயன்

உன்னை நேசித்தேன்

க ங ச
தெரியாது எனக்கு
கவிதை எழுத
தொடங்கியதெல்லாம்
உன் கண்களில்
படித்த பின்புதான்

கண்களில் தொடங்கி
காதல் வரை
படித்துவிட்டேன்

தேர்வு இன்று

முடிவு பற்றி
அக்கறையில்லை
முயற்சிதான் முக்கியம்
வெளியே சொன்னாலும்
உள்ளுக்குள் அதிரும்
இதயம்

ஊரையே எழுப்புதடி

காதல் மேல்
நம்பிக்கை வைத்து
வந்துவிட்டேன்

என் வழி தேடி
உன் விழி தேடி

ஏனெனில்

நல்லன எல்லாம் தரும்
அவளின் கடைக்கண்களும்!

Tuesday, July 17, 2007

Thinking blogger awards 2007



Update: மக்களே, எல்லாரையும் பற்றி எல்லாரும் comments sectionல பேசி இருக்காங்க. எல்லாரும் miss பண்ணாம படிங்க. ஒரு postஆ போட வேண்டிய விஷயங்கள் எல்லாம் commentsல். நன்றி ஹை :)

வழங்குவது பரணி.

Supported by Marutham (Thanks for the tag, Marutham. But இந்த tagஅ நான் கொஞ்சம் customize பண்ணிட்டேன். Sorry for that :-)

1. All in All: கதை, கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சினிபிட்ஸ் எல்லாத்த பத்தியும் எழுதும் மாம்ஸ் மு.க. அவர் அளவுக்கு எழுதறதுக்கு 10,15 assistants போட்டா கூட நடக்காது.

2. கவிப்பேரரசி: குரு வேதா அவர்களின் கவிதைக்கு நான் அடிமை. எல்லா விஷயத்த பற்றியும் இவங்களால கவிதைல சொல்ல முடியும். அவங்க தமிழ் ஆற்றலுக்கு நான் எப்பவும் சிஷ்யன்.

3. (காதல்)கதைச்செல்வி: கதை, அதிலும் காதல் கதை எழுதறதுக்கு பிரியாவை அடிச்சிக்க இன்னொருத்தர் புதுசா பொறந்துதான் வரனும்.

4. Comedy Kings: அம்பி, அருண், ஷ்யாம் இவங்க அளவுக்கு comedyயா எழுத யாரும் இருக்கர மாதிரி எனக்கு தெரியல ('இத விட கம்மியான காசுக்கு washing machine வேனுன்னா நான் தான் உங்க வீட்டுக்கு தொவச்சி போடனும்'...இந்த dialog ஒரு sample தான்). இவங்க மூனு பேரும் ஒன்னுகூடினா சுத்தி இருக்கறவங்க கண்ணில் நீர் (சிரிச்சி...சிரிச்சி). (பி.கு: அண்ணன்s நான் உங்களை வச்சி எதுவும் comedy பண்ணல. நம்புங்க :)

5. குட்டிப்பொண்ணு: ரம்யா. blog உலக செல்லப்பொண்ணு. இவங்க போடுற postaவிட commentsதான் famous. commentsல ஆப்பு வைப்பதில் specialist. smithaன்னு ஒரு 2 வயசு குழந்தைய நான் கூப்பிட, அது வாராம போக, அதுக்கு 'smithaa paathu adicha kannu, ava kudutha unnaku bun-u'ன்னு இவங்க போட்ட commentஅ படிச்சி ஊரெல்லாம் என்ன பார்த்து கை கொட்டி சிரிச்சத....இப்ப நெனச்சாலும்....பாசக்கார பொண்ணு.

6. பாடும் நிலா: மருதம். blog உலக பாட்டுக்குயில். தியேட்டர் போய் படம் பார்க்காத இவங்க பாட்டு எல்லா தியேட்டர்லயும் ஒருநாள் கேட்க போகுது. "நின்னை சரனைடைந்தேன்" என்னோட fav. பாட்டு மட்டும் இல்லீங்க, dancer, superஆ glass painting பண்ணுவாங்க, பயங்கர padips...எல்லாத்த விட superஆ bulb வாங்குவாங்க :)

7. வாழ்த்து Specialist: G3. எல்லாரோட birthday, blogger meet, marriage இப்படி எந்த நாள் ஆனாலும் அவங்கள வாழ்த்தி, functionஅ அப்படியே தத்ரூபமா retelecast பண்ணுவதில் இவங்களுக்கு இணை இவங்க தான். 3000 comments வாங்கி கின்னஸ் bookல இடம் பிடித்து இருப்பதுதான் இவங்களோட latest சாதனை.

8. பாட்டுக்குயில்கள்: kittu maama and maami. made for each other. அவங்க duets எல்லாம் கேட்க குடுத்து வச்சி இருக்கனும். 'சகலகலாவல்லவனே'ன்னு இவங்க maamsஅ பார்த்து பாடுறதும், 'உருகுதே மருகுதே' அவர் மாமியை பார்த்து பாடுறதும் செம romantic.

9. விஜய T.R: Gops. post-o, comments-o எங்க போனாலும் T.R மாதிரி நாலு கவிதை(???) போட்டு கலாய்ப்பதில் மண்ணன். அதே மாதிரி எல்லாத்த பற்றியும் எழுதுவான். கருப்பு கண்ணாடி, ஜன்னல், slam book இப்படி எத பத்தி வேனாலும் எழுதறதுல இவனும் ஒரு allrounder.

10. Comedy Queens: Porkodi, MyFriend. பொண்ணுங்க இந்த அளவுக்கு comicஆ எழுதுவாங்கலான்னு நான் ஆச்சரிய படுறது இவங்கள பார்த்துதான். அதிலும் கொடி பண்ற ரவுசுக்கு அளவே இல்ல. ரங்கமணி எப்படி சமாளிக்கறாரோ :)

11. தத்துவஞானி: dreamzz. எப்ப எப்படிபட்ட post போடுவார்னே தெரியாது. 'தேவதை ஊர்வலம்' ஒரு நாள் light weighted கவிதை போட்ட மறுநாள் 'சாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு heavy duty post போடுவாரு. இவர் எழுதற நிறைய விஷயத்த புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு வயசு பத்தாது :)

12. Bold Comment Bro: k4k. 25அ 25 தடவை, 500அ 500 தடவைன்னு boldல comment போட்டு அலற வைப்பதில் கில்லாடி. இவரோட comedyக்கும் நான் ரசிகன். அண்ணிக்கிட்ட அப்பளக்கட்டையால வாங்கின அடியை எல்லாம் மறைத்து சமாளிச்சி சிரிக்கும் leher :)

13. Science Student: Raji. படம் போட்டு பாகம் குறிப்பதில், சே, கவிதை போடுவதில் பயங்கர பெரியவங்க.

14. இங்கிலீஷ்க்காரங்க: KK & Prithz. இவங்க post எல்லாம் படிச்சி பாதி நேரம் stomach burn தான். எப்படி englishல இவ்ளோ interestingஆ post போட முடியும் யோசிச்சே பாதி நாள் no sleep. அதிலயும் englishல comedy பண்ற kkக்கு ஒரு சலாம்.

P.S: இந்த tag actually எப்படி இருக்கனும்னு தெரிஞ்ச்சிக்க இங்க படிங்க. நான் கொஞ்சம்(????) மாத்திட்டேன். இதில் நான் குறிப்பிட்டுள்ள எல்லாரும் அவங்களுக்கு புடிச்சவங்களுக்கு இந்த awards குடுக்காலாம்.

post கொஞ்சம்(????) பெருசா போயிடிச்சி. பாத்து போட்டு குடுங்க. இந்த postக்கு நீங்க comment போடுறதுக்குள்ள் போன postக்கு நான் reply போட்டுடறேன். அடிக்க வராதீங்க pls...

Monday, July 16, 2007

Random Thoughts

ஒன்னுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது.

கடவுளே, நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாத்து
எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.

உங்கள் நண்பர்களிடம் அன்பு கொள்ளுங்கள்,
அன்பை ஆயுதமாக்கி கொல்லாதீர்கள்.

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதை கடையில் தேனீர் குடிப்பேன்.

சாலையில் நானாக போனதும் இல்லை
சமயத்தில் நானாக ஆனதும் இல்லை.

உன்னை காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை
அப்படி தேவையென்றால் அது காதலாகவே இருக்கட்டும்.

புது உலக அதிசயம்ன்னு யாரோ ஒரு dog சொன்னத நம்பி மாஞ்சி மாஞ்சி ஓட்டு போட்ட நாம எல்லாம் புத்திசாலிங்க. மாத்தி மாத்தி dmkக்கும் admkக்கும் ஓட்டு போடுறவங்க கேனையனுங்க.

இன்னைக்கு busல வந்த மஞ்ச சுரிதார் சூப்பரப்பு. என்ன projectனு நாளைக்கு விசாரிக்கனும்.

என்னைக்குதான் உருப்படியா ஒரு post போடப்போறேனோ.

P.S: ஒரு 5 நிமிடம் என்ன மனசில ஓடுதுன்னு observe பண்ணினப்ப வந்த matters இதெல்லாம். இன்னும் நிறைய தோனிச்சி. some are not suitable to write. refined matters மட்டும் இங்க. மனசு ஒரு dustbinனு சும்மாவா சொன்னாங்க :(

Friday, July 06, 2007

கண்களால் காதல் செய்

அலைபாயும் மனது
உன்
விழிகளில் விழுந்ததும்
அமைதியானது
தியானம் கற்றேன்



தேடித்தேடி
தொலைந்து போனவன்
நான்
கண்டுபிடித்தது உன்
காதல்
கண்டெடுத்து
சிறையில் அடைப்பது
காதலி விழி
காதல் விதி



பட்டாம்பூச்சிகள் பிடித்து
பழகியவன் நான்
ஒரு
பட்டாம்பூச்சிக்கு என்னை
பிடித்துப்போனது
வரம்



மலர் திறக்கும் வண்டுகள்
தெரியும்
மனம் திறக்கும் வண்டுகள்
உன் கண்கள்



தேவதை கனவுகள்
வரும் எனக்கு
என்
கனவுதேவதை
நீ



தேடிக் கொல்வது
வதை
தேடவைத்து கொல்வது
தேவதை




P.S: Dreamzz எழுத சொன்ன கவிதை(???) tag இது. போதும்டா சாமி. நம்மால முடியாது. சாதா tag எழுதவே பாதி முடியை பிச்சிக்க வேண்டி இருக்கு. இந்த மாதிரி கவிதை tag நாலு எழுதினா சோ தலை மாதிரி ஆயிடும் என் தலை,இப்பவே பாதி சோ மாதிரி தான் இருக்கு :(

ஆகவே நண்பர்களே, நல்லவர்களே எந்த problemஆ இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி எக்கசெக்கமா மாட்டி விட்றாதீங்க.

அதனால நல்ல பையனா நான், குட்டி பொண்ணு ரம்யாவ மட்டும் மாட்டிவிட்டுட்டு escape :)

Tuesday, June 26, 2007

எட்டு எட்டா பிரிச்சாச்சி

இந்த எட்டு போடுறது, ரூட்டு போடுறது(??) இதெல்லாம் நமக்கு வராதுங்க. இது தெரியாம G3 மாட்டி விட்டுடாங்க. அவங்க பாசத்துக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிட்டு,

சரி சமாளிப்போம்.

இந்த எட்டு matters-um என்னை பற்றித்தான். ஆனால், சரி படிச்சி தெரிஞ்ச்சிக்கங்க. Rules ,as usual, are broken as per my convenience.

(0-8): எப்படி இருந்தேன்னு எனக்கு ஞாபகம் இல்லை. வீட்ல விசாரிச்சப்ப சட்டை போட்ட குரங்கு வந்தா வேடிக்கை பார்த்துக்கிட்டு, சாப்பிடும் போது அடுத்தவங்க tiffex boxஅ பார்க்காத, uniform tieஐ கடிச்சிட்டு வந்து அடிவாங்கிக்கிட்டு, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவில் விளையாடும் பசங்களை வேடிக்கை பார்க்கும் ஒரு பையனாத்தான் இருந்து இருக்கேன்.

(9-16): படிப்பிற்க்காக மாமா என்ன madras கூட்டிட்டு வந்துட்டாங்க. மாமா பேர காப்பாத்த படிப்பு தவிர வேறெதுவும் செய்ததில்லை. ரொம்ப படிச்சதில் 10வதில் school first வந்துட்டேன். இன்று வரை நான் பெருமையாக நினைக்கும் ஒரே விஷயம் இதுதான்.

(17-24): அடிச்சி புடிச்சி 12 முடிச்சி, medical கிடைக்காம அழுது, engineering படிச்சி, ஒரு வருஷம் அப்படி இப்படி ஓட்டி, tcs join பண்ணி, இதோ 4 வருஷம் ஓடிபோச்சி. என்னை வளர்த்து ஆளாக்கின பெரியம்மாவை இழந்தது மற்ற எதுக்குமே பெருமை பட்டுக்க முடியாம போச்சி.

(25-32): எதோ ஒரு பாவப்பட்ட ஜீவன் என்கிட்ட வாக்கப்பட போகுது. எனக்கு அவள புரிஞ்சி, அவளுக்கு என்னை புரிஞ்சி, சுத்தி உள்ளவங்க கொளுத்தி போடுறதெல்லாம் வெடிக்க விடமா போராடி, வாரத்தில பாதி நாள் satyamல 3 மணி showக்கு ரெண்டு டிக்கெட் போட்டு, foneஅ போட்டு வர சொல்லி, நானும் வேலை பார்க்காம, அவளயும் பார்க்க விடாம....ஷ்ஷ்ஷ்ஷ் ஒன்னும் சொல்றதுக்கில்லை.

(33-40): நானே ஒரு குழந்தை. இதில எனக்கு....நமக்கு இந்த twins, tripletsன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி எதாச்சும் நடந்து....அடடா அவங்களுக்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கனும். அதை விட முக்கியம் அவங்களுக்கு homework பண்ணி குடுக்கனும். ரொம்ப முக்கியம் தாத்தா, பாட்டி கிட்ட அவங்க கதை கேட்டு வளரனும்.

(41-48): இங்க கொஞ்சம் tedious ஆகுது. officல pressure, வீட்ல pressure cookerன்னு ஏகப்பட்ட problems. எப்பவுமே smoothஆ போனா life bore அடிச்சிடும் இல்ல. so கொஞ்சம் போராட்டம். எல்லா நேரத்துலயும் support பண்ற family இருக்கறதுனால அப்படி இப்படின்னு சமாளிக்கிறேன்.

(49-56): உனக்கு தான் திறமை இல்ல. நாங்களும் அப்படியான்னு கேட்டு பசங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சி பெரிய ஆளா ஆகிட்டாங்க. அதுக்கு முன்னாடி ஆளுக்கொரு ஆளு புடிச்சிட்டாங்க. இப்ப அதிகாரம் எல்லாம் அவங்க கையில, நாம என்னத்த சொல்ல. இதுக்கு நடுவில சில உறவுகளின் இழப்புகள். சில உறவுகளின் வரவுகள்.

(57-64): இதுக்கு மேல இருந்து என்னங்க பண்ணப்போறோம்னு better half கேட்க, அதுவும் சரி தான்னு packup :)

மனசாட்சி: சேரன் படம் பார்த்துட்டு வந்த effect. நான் இல்லாத மாதிரியே எழுதியிருக்க.


முக்கியாம பகுதி: நான் மட்டும் மாட்டினா போதுமா. So நான் இவங்களை எல்லாம் மாட்டி விடுறேன்.
1. Ambi
2. Arun
4. k4k


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Sunday, June 24, 2007

சத்தம் போடாதே

Yuvan and Vasanth combo rocks again in Satham Podathey. I loved 4 of the 5 compositions, this one being my favourite. Superb lyrics by na.muthukumar and a soothing singing by Adnan Sami (தமிழ் தாண்டவம் ஆடுது Adnan Sami நாக்குல ;-)). உணவுகள் பிடிக்கல sequence simply superb.

[பல்லவி]

இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ

இந்த இன்பமான இம்சையில ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ

காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது


உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது
காதலின் போதைக்கு அளவு இல்ல

நண்பர்கள் பிடிக்கல நாய்க்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவு இல்ல


[சரணம் 1]

காதல், காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்தபின்னே கையில் மிஞ்சும் நூல்கன்டா


காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால்பந்தா

கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி


உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி
உனைக்கண்டு ஏய் அது தொண்டையில் தினறுதடி


[உணவுகள்...]

[சரணம் 2]

நண்பா, என் காதல் என்ன ஆகும் என்றேனே
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றாளே


சொல்லாத ஆசைகள் ஏனடி ஏனடி
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏனடி ஏனடி

நஞ்சென்றால் ஏய் ஒருமுறை கொல்லுமடி
நினைவுகளோ ஹேய் பலமுறை கொல்லுதடி

[உணவுகள்...]

கொசுறு:

பேசுகிறேன்... பாட்டுல வர lines இது. எனக்கு ரொம்ப பிடிச்சது.

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

Wednesday, June 20, 2007

இன்றைய மொக்கை

மண்டைய காப்பாத்த helmet போடலாம்
helmetஅ காப்பாத்த மண்டைய போட முடியுமா (யோசிங்க)


courtesy: அரசு (தமிழக அரசு இல்ல)

தினம் தினம் பாட்டு கேட்கிறோம்
அந்த பாட்டுக்கு ஒரு தினம் இருக்கா (மண்டைய பிச்சிக்கங்க)


courtesy: BIG FM

தலையில 'N''I' தடவலாம்,
A-Z தடவ முடியுமா ('N''I' தடவி பாருங்க. பிச்சிக்கிட்ட முடி வளரும்)


தீவாளிக்கு dress pothys-லயும் எடுக்கலாம், chennai silks-லயும் எடுக்கலாம்
ஆனா பக்கத்து வீட்டு கொடியில இருந்து எடுத்தா, freeஆ எடுக்கலாம் (இன்னா idea-பா)


coutesy: Radio One

அட சிரிங்கப்பா :)

Sunday, June 17, 2007

இனி ஒரு tag செய்வோம்

நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 50 வருஷத்துக்கு மேல ஆச்சி (மனோரமா இல்ல....அண்ணன் அம்பி கண்டுக்க கூடாது). இன்னும் நாம ஒரு tag ஆரம்பிக்கலயே அப்படின்ற வருத்தம் எனக்கு சின்ன வயசில இருந்தே இருக்கு (No...No...No violence.... please....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...அடிக்க எல்லாம் வர கூடாது....ஆமாம்)

என்ன tag ஆரம்பிக்கலாம்னு மண்டைய போட்டு பிச்சிக்கலாம்னு தான் நெனச்சேன். மண்டையில இருக்கற முடி நிலவரம் கொஞ்சம் கலவரம் கொடுக்க....சொரி....சே....சரி...ஏறகனவே blogல மரம் வளர்க்கிற ideaவ use பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

முதல்ல condition. ஒன்னே ஒன்னுதான்.

1 (a). ஒரே ஒரு ஆளத்தான் tag பண்ணனும். கண்டிப்பா ஒரு ஆள tag பண்ணனும் (வார்த்தை இன்னாமா வெளயாடுதுடா பரணி)

1 (b). tag படிச்ச 2 (அ) 3 நாளுக்குள்ளே tagged person post போட்டுடனும் (என்னா ஒரு வில்லத்தனம்)

okies. இப்ப கதைக்கு($#^%&%) போலாம். குரு, மாம்ஸ், Priya எல்லாரும் மன்னிச்சிக்கங்க. விதி வலியது.

-------

கதை நடக்கிறது (அது எப்படி நடக்கும்னு எல்லாம் வெறுப்பேத்த கூடாது) june போனா july வரும் இந்த காலம் இல்ல. March போனா september வரும் அந்தக் கால கல்லூரி காலம்.

துப்பாக்கி இல்லாமலே சுட்டுக்கிட்டு இருந்தது சென்னை சூரியன் (wow...wow...wow). வசதி இருக்கறவங்க cooling glass போட்டுக்கிட்டு இருந்தாங்க. வசதி இல்லாதவங்க coolingஆ ஒரு glass மோர் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க(அடடா.... அடடா....).

உன்மையான கல்வி வகுப்புக்கு வெளியேதான் கிடைக்கும்னு யாரோ சொன்னத correctஆ தப்பா புரிஞ்சிக்கிட்ட ஒரு இளைஞர் கூட்டம் அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள குட்டி(அந்த குட்டி இல்ல) சுவத்துல உட்கார்ந்து இருந்துச்சி (college பசங்களையும் குட்டி சுவத்தயும் பிரிச்ச பாவம் நமக்கெதுக்கு). அதுல கார்த்திக்கும்(மாம்ஸ் நீங்க இல்ல) இருந்தான்( heroக்கு கார்த்திக்னு பேர் வைக்கிற படம்தான் இப்பலாம் box office hit) .

a for ambika, b for bhuvanaன்னு வெளியவே attendance எடுத்திக்கிட்டு இருந்தாங்க பசங்க. s for sandhya.....

"டேய் கார்த்தி உன் ஆளு சந்தியா வராடா"

"மச்சான், அவ எனக்கு கெடப்பாளாடா"...இது கார்த்திக்.

"கெடைக்க மாட்டாடா மச்சான்"

"ஏன்டா".

"ஏன்னா அவளுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி"

------

இத first continue பண்ணப்போறது காதல் யானை வளர்த்த blog உலக அனுராதா ரமணன், சிவசங்கரி Priya அவர்கள் (ஆமாம், இந்த மொக்கைக்கு அப்புறம் இப்படி யாராச்சும் எழுதினாதான் படம் கொஞ்சமாச்சும் ஓடும்னு நீங்க நினைக்கிறது கேக்குது).

so மக்களே சந்தோஷமா இருங்க. எல்லாரும் இந்த கதையை எழுதனுங்கறது என்னோட சின்ன வயசு கனவு. அத நிறைவேத்திடுங்க. எல்லாரும் சேர்ந்து அடிக்க வரதுக்கு முன்னாடி நான் jute :)

Monday, June 11, 2007

சாதா to special சாதா

பரிசுகளை பஞ்சிமுட்டாய் மாதிரி வாங்கும் என் குரு வேதா அவர்களுக்கு வாழ்த்துக்களையும், இன்று பிறந்தநாள் கொண்டாடிய தோழி பத்மபிரியா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு start meejic....

முன்குறிப்பு: over scene உடம்புக்கு ஆகாது.

முன்குறிப்புக்கு பின்குறிப்பு: சந்தோஷத்த பகிரிந்துக்கிட்டா ரெட்டிப்பாயிடும். துக்கத்தை பகிர்ந்துக்கிட்டா பாதியாயிடும்.

முன்குறிப்புக்கு பின்குறிப்புக்கு பின்குறிப்பு: இது மாதிரி மொக்க போட்டா உன் மண்டை காலியாயிடும்.

சரி matterக்கு வரேன். சாதாவா (சதாவோட இல்ல) பெங்களூரு போன என்ன special சாதா ஆக்கிட்டானுங்க. நான் இப்ப SAP certified development consultant for Exchange Infrastructure and Integration Process (யப்பா....இப்பவே கண்ண கட்டுதே). சென்னையில வெயில் மண்டைய பொலக்கும் போதே தெரியும்டா நாட்டுல இப்படி எதாச்சும் கெட்டது நடந்து இருக்கும்ன்னு யாரும் feel பண்ணக்கூடாது.

இனிமேல உங்களுக்கு யாருக்காவது ஜலதோஷம்னா என்கிட்ட வாங்க. vicksங்கறத சுத்தி சுத்தி எழுதி தருவேன். அத நீங்க அப்படியே சாப்டலாம்.

blog உலகமே தூங்குது. comment வரவே மாட்டேங்குது. comment போடவே ஒரே சோம்பலா இருக்குன்னு Priya feel பண்றாங்க.

blog union வரதுக்கு முன்னாடி நம்மளோட ஒரே சந்திப்பு இடம் இந்த blogதான். இப்ப எல்லாரும் mailயே பேசிக்கறதுனால comment போடவே தோனமாட்டேங்குது. ஒரே மக்கள ரெண்டு வேறு இடங்களில் சந்திப்பதில உள்ள problem இது. comment குறையறதுனால நமக்கு blog எழுதற ஆர்வமும் கொறஞ்சிடுது. இப்படியே போனா எல்லாரும் blog எழுதறத கண்டிப்பா நிறுத்திடுவோம். இப்பவே நிறைய பேரோட blogs வெறிச்சோடி கெடக்குது.

நாம எல்லாம் எப்படி சந்திச்சோமோ அந்த இடம் அப்படியே மறஞ்சி போயிடும். atleast அது நடக்காம பார்த்துக்க try பண்ணுவோம்.

நம்மால முடிஞ்ச அளவுக்கு எழுதுவோம். என்ன எழுதினாலும் comment போடுவோம்.

நான்: அப்பாடா எப்படியாவது மக்கள உசுப்பேத்தி comment வாங்கிடனும்.

நீங்க: நீ முதல்ல போன post commentக்கு replyய போடு.

Sunday, May 13, 2007

பாவ்னா

மு.கு : இந்த postக்கு என்ன தலைப்பு வச்சாலும் பொருத்தமா இருக்கும். அதனால எனக்கு புடிச்ச தலைப்பை வச்சிக்கிறேன் (இது அந்த வச்சிக்கிறேன் இல்ல).

1. நேற்று பிறந்த, சே, பிறந்தநாள் கொண்டாடிய பாசத்தின் பிறப்பிடம், முதல்வர் பதவியை நாட்டாமைக்கு வழங்கிய கலியுக வள்ளல், வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, மாம்ஸ் மு.க அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

2. நாளை புது வாழ்வு தொடங்கும் அண்ணன் அம்பி & Ms.C (அப்பாலிக்கா Mrs.C ன்னு தானே போடுவீங்க) அவர்களுக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்.

என்னடா மொய் வக்க பயந்துக்கிட்டு blogலயே வாழ்த்தான்னு தப்பா feel பண்ணக்கூடாது.

உங்களை எல்லாம் கொஞ்ச நாள் நிம்மதியா விடலாம்ன்னு கம்முன்னு இருந்தேன். இருந்தேனா....ம்ம்ம் கொட்டுங்கப்பா....

நீ புடுங்கற ஆணி எல்லாம் சரி இல்ல, அதனால பெங்களூரு போய் ஆணி புடுங்கறது எப்படின்னு கத்துக்கிட்டு வான்னு என்னோட டேமேஜர் சொல்லிட்டாரு. அதனால அண்ணன்(நான்தேன்) மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிகிட்டு பொடி நடையா கெளம்பிட்டேன்.

அதான் உங்க கண்ணாலத்துக்கு வர முடியல. G3 அவர்கள் மூலமா வாழ்த்துக்களையும், மொய்யும் அனுப்பி விடுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க.

இந்த functionல நிறைய பேர meet பண்ணலாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன் (காய போட வேண்டியதுதானே gops அண்ணன்(???!!) கேட்டகூடாது. nurseஅ site அடிச்சிக்கிட்டு நல்ல பையனா இருக்கனும்). கடவுள் அதுக்கெல்லாம் ஒரு பெரிய ஆப்பா அடிச்சிட்டாரு. அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.

மக்களே இன்னும் ஒரு மாசத்துக்கு நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். முடியும் போதெல்லாம் உங்க கடை பக்கம் வந்துட்டு போறேன்.

எல்லாரும் சந்தோஷமா இருங்க.

போறதுக்கு முன்னாடி...

என்னதான் குளுகுளுன்னு இருந்தாலும்
icecreamஅ வச்சி shave பண்ண முடியுமா.
இல்ல, வாசனையா இருக்குன்றதுனால
shaving creamஅ நக்கி நக்கி சாப்ட முடியுமா.


பேரு வச்சியே, சோறு வச்சியான்னு யாரும் பல்லுமேல வாய போட்டு கேட்டுட கூடாதுலே...அதாம்லே....ஹி..ஹி..ஹி...

Tuesday, April 24, 2007

கிறுக்கல்ஸ்

நெருங்கும் போது
முகம் திருப்பிக்கொள்ளும் தேவதை
நீ
விலகும் போது
முத்தத்தில் கொல்லும் ராட்சஷி
நீ


பிரிந்திருந்த
வெயில் நான்
மழை நீ
மேகத்தை சற்று
ஏமாற்றிவிட்டு
ஒன்றானபோதுதான் தோன்றியது
வானவில்


இதயம் இல்லாமல்
வாழ்பவன் நான்
இரண்டு இதயங்களில்
வாழ்பவள் நீ
இருவரையும் படைத்தது
காதலெனும்
கடவுள்


உன்
உதட்டின் ரேகை
வருடியபோது
வளர ஆரம்பித்தது
என்
ஆயுள் ரேகை


வாழ்க்கை
தவம்
நீ
வரம்


P.S:
மனசாட்சி: ஏண்டா, இப்படி கவிதைங்கற பேர்ல எல்லாரையும் மண்ட காயவைக்கிற?

நான்: அதெல்லாம் ஒரு கொலை, சே, கலை. உனக்கு புரியாது.

ம: கொலையேதான். மத்தவங்களுக்கு மட்டும் புரியுதா என்ன?. எல்லாம் ரத்தகளரியோட தான திரும்பி போறாங்க.

நா: உனக்கு பொறாமை.

ம: ஆமாம். அப்புறம் இந்த காதலை விடவே மாட்டீங்களாடா. ஆளாளுக்கு அத அடிச்சி, தொவச்சி, புழிஞ்சி பாவம் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கு. அத வுட்ருங்களண்டா.

நா: முடியாது. அதெல்லாம் தமிழ் கலாச்சாரம். விட முடியாது. குழந்தை எப்படி முதல்ல அம்மான்னு சொல்லுதோ அது மாதிரி கவிதைன்னா காதல்ல தான் ஆரம்பிக்கனும். அட இதுவே கவித மாதிரி இருக்கே...ஹி..ஹி.

ம: அடங்கொக்கா மக்கா. சரி, இதுக்கெல்லாம் inspiration யாருன்னு எல்லாரும் கேட்கறாங்கல்ல, அதயாச்சும் சொல்லித்தொலையேன்.

நா: inspiration எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் perspiration தான். மண்ட காஞ்சி போய் இருக்கற ஒரு நாள்ல, மல்லாக்க படுத்துக்கிட்டு, ஒரு கால இன்னொரு கால் மேல தூக்குபோட்டு, பாதி கண்ணை மூடிக்கிட்டு விட்டத்த பார்த்துக்கிட்டே இருந்தா இது மாதிரி கவிதை எல்லாம் வரும். சென்னை வெயிலுக்கு fan போடாம இருந்தா இன்னும் betterஆ கூட கிடைக்கலாம்.

ம: கடவுளே, இந்த dog கிட்ட இருந்து என்ன கொண்டுபோய் முதியோர் இல்லத்துல வுட்ருங்க. இவன் கூட இருந்து நான் படுற அவஸ்த தாங்க முடியலடா சாமி.

Saturday, April 21, 2007

தாத்தாவும் நானும்

என்னடா இது?
இதான் தாத்தா laptop.
அப்படின்னா?
lapனா மடி, topனா மேல. மடி மேல வச்சிக்கிற computer.
அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
------------

என்னடா பன்றா?
blog அடிக்கறேன் தாத்தா.
ப்ளாக்கா அப்படின்னா?
அத எப்படி சொல்றது....ம்ம்ம்
ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
-----------

டேய், உன்ன பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு.
தாத்தா...அவன் பையன்.
அடப்பாவி, முடி வளத்து சட பிண்ணி இருக்கான். கடுக்கன் போட்ருக்கான். பின்னாடி இருந்து பார்த்தா பொட்டபுள்ள மாதிரியே இருக்கான்.
அதான் தாத்தா இப்ப fashion.
என்னடா அவன் முடி பச்ச கலர்ல செம்பட்ட பாஞ்சிருக்கு?
தாத்தா...அது செம்பட்ட இல்ல. சாயம் பூசி இருக்கான். அதுவும் fashion.
ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
------------

உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
-----------

போன மாசம் உங்க பெரிய தாத்தன் சாவுக்கு ஏன் வரல நீ.
எங்க தாத்தா, எங்க ரெண்டு பேருக்குமே officeல பயங்கர வேலை. வர முடியாத நெலம.
ஓ. சாயந்தரம் உன் பொண்டாட்டி அபியோட அம்மா செத்துட்டான்னு அழுதா. யாருடா அது அபி?
தாத்தா....அது கோலங்கள்ன்னு ஒரு TV நாடகத்துல வர பொண்ணு.
தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ.
-----------

எவ்ளோடா சம்பாத்திக்கிற?
மாசம் 50,000 தாத்தா.
ராத்திரியில நல்லா தூங்குறியா?
எங்க தாத்தா. நல்லா தூங்கி வருஷ கணக்காகுது.
உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.
-----------

எப்படா புள்ள பெத்துக்க போறீங்க?
எங்க தாத்தா. முதல்ல ஒரு வீடு வாங்கனும். அப்புறம் ஒரு car வாங்கனும். அப்பறம் தான் குழந்தய பத்தி எல்லாம் யோசிக்கனும்.
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.
----------

சரிடா, நான் ஊருக்கு கெளம்பறேன்.
சரிங்க தாத்தா. போயிட்டு போன் பண்ணுங்க.
டேய் ஒன்னு சொல்றேன் மனசுல வச்சிக்க.

இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.

Tuesday, April 17, 2007

பாட்டு மச்சி பாட்டு

வித்யாசாகர் ரொம்ப பெரிய music directorஆ இல்லாதப்ப போட்ட பாட்டு இது(படம்: பிரியம்). எல்லா பாட்டுமே superஆ இருக்கற இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது. Again, வைரமுத்து rocks :)

[எல்லா பாடலும் கேட்க]
பிரியம்

[இந்த பாடல் மட்டும் கேட்க]
ஆதாம் ஏவாள்

[படித்துகொண்டே ரசிக்க]

[பல்லவி]
ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு...எந்த நெருப்பு


கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு...அந்த நெருப்ப்பூ


எந்த நெருப்பு...எந்த நெருப்ப்பூ

உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு...காதல் நெருப்பு


[சரணம் 1]

காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை


காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வியில்லை


காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை


காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பதில்லை


இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபொடி


காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்குமடி


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
long live love

அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
long live love

[ஆதாம் ஏவாள்...]

[சரணம் 2]

காதல் என்பது பூவனம் அல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்


மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய்


மாலை ஏந்தி வந்தாலும், ஒரு
வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன், நான்
எதையும் எதிர்த்து சாதிப்பேன்.


அயிரை மீன்கள் துணிந்துவிட்டால்
அட்லாண்டிக்கடல் பெரிதல்ல


சிட்டுகுருவிகள் நினைத்துவிட்டால்
சீன பெருஞ்சுவர் தடையல்ல


ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
i love you
அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
i love you

[ஆதாம் ஏவாள்...]

P.S: ஒன்னும் சொல்றதுக்கில்லை. எதோ உங்களால முடிஞ்சத.... :-)

Friday, April 13, 2007

அழகு ஆறு

எனக்கு பிடித்த அழகுகளில் ஆறு எழுதச்சொல்லி மாம்ஸ் அன்புக்கட்டளை போட்டிருந்தார். பாவனாவ பத்தி எழுதுன்னு அவர் directஆவே சொல்லி இருக்கலாம். சந்தோஷ பட்டிருப்பேன். இருந்தாலும் அன்புக்கு நான் அடிமை. So start meejic...

1. அம்மா: அது எப்படி உலகத்தில் எல்லா அம்மாக்களும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஊட்டி விடும் உணவு மட்டும் எப்படி எப்பொழுதும் sema tasteஆ இருக்கு.

2. அழகு: தமிழில் அழகு என்ற சொல் அழகாக இருப்பதால் அதை அழகானவற்றை குறிக்க பயன்படுத்துகிறோமா, இல்லை, அழகானவற்றை குறிக்க பயன்படுத்துவதால் அந்த சொல் அழகாக இருக்கிறதா.

3. தமிழ் பெண்கள்: சின்ன வயதில் இருந்தே site அடிச்சே வளர்ந்ததாலோ என்னவோ, அவ்வப்பொழுது மலையாள கரையோரம் ஒதுங்குவது மாதிரி தெரிந்தாலும், தமிழ் பெண்களின் அழகிற்கு நான் அடிமை.

4. பாடல்: ராஜபார்வையில் வரும் 'அழகே அழகு' (inspite of its popularity being suppressed by அந்தி மழை) and பாட்ஷாவில் வரும் 'நீ நடந்தால்'. அழகு என்றவுடன் என் நினைவிற்கு வருபவை.

5. மழலை நடை: மயில் அழகு, மான் அழகு என்பார் தத்தி தத்தி வரும் மழலை நடை அழகு பார்க்காதோர்.

6. நீ(ங்கள்): உலகத்தின் அழகு எல்லாம் ஒன்றே ஒன்று, உன் கண்ணாடி பார்த்துவிடு புரிந்து போகும்.

Me tagging

1. K4karthik
2. Raji
3. Ramya
4. Sachin Gops
5. SKM
6. Veda

Sunday, April 08, 2007

நீயும்.....நீயாகிய நானும்

நீ சூரியன்
நான் பூமி
உன்னை சுற்றுபவன்
நான்
என்னை சுட்டெரிப்பவள்
நீ

நீ
போடும் கோலத்தில்
சிறைப்பட்ட
புள்ளி நான்
விட்டு விலகவும்
மனமில்லை
வெளியே வரவும்
வழியில்லை

என்
காதல் கடிதங்களில்
முதல் வரி நான்
முகவரி நீ


கொக்கிடம் தப்பி
தூண்டிலில் மாட்டிய மீன்
நான்
காதலிலெல்லாம் தப்பித்து
உன் கண்களில்
மாட்டிக்கொண்டேன்


எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்
உன்னை காதலித்து
காதலாகி போனேன்


P.S: கவிதைக்கு (???) comment போடுற மாதிரி ஒரு கஷ்டமான வேலை இருக்குமான்னு தெரியல. கண்டிப்பா 'நல்லா இருக்கு'ன்னு தான் சொல்லனும். நல்லா இல்லனு சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு போயிட முடியுமா என்ன. auto, lorry ஏன் இப்பலாம் சொந்தமா flight செஞ்சி வீட்டுக்கு வரும். எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னா அதுல எதாச்சும் உள்குத்து, orkutu இருக்கான்னு தெரியாது.

நிஜமாக 'நல்லா இருந்து' எல்லாரும் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதுக்கு அப்புறம் நாமலும் போய் 'நல்லா இருக்கு'ன்னு சொன்னா அந்த 'நல்லா இருக்கு'க்கு effect இருக்குமா (இது பற்றி குரு கிட்டக்கூட கேட்டேன்). நாம படிக்காமலயே 'நல்லா இருக்கு'ன்னு சொன்னதா நெனச்சிடுவாங்களோ.

எவ்ளோ கஷ்டமப்பா!

இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுலயும் நீங்க எல்லாம் பொறுமையா comment போட்டுட்டு போறீங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ரொம்ப நன்றி ஹை !

Friday, April 06, 2007

மறந்து போன மனிதநேயம்

scene 1:

காலையில டீ குடிக்க போனேன்.

டீ கடையில ஒரு சின்ன பையன். படிச்சி இருந்தா அவன் ஐந்தாவது படிக்கனும். அங்க வேலை பார்க்கிறான். திடீர்னு டீ மாஸ்டர் mobileக்கு ஒரு call வருது. அந்த பையன் வீட்ல இருந்து பேசறாங்க. அந்த பையன் வாங்கி

"ஆங், சொல்லுமா" என்கிற போது அவன் குரல் உடைகிறது. அங்க பேசுற அவனோட அம்மா மனசு எப்படி இருந்து இருக்கும்.

"சீக்கிரம் பேசிட்டு, இந்த டீயை எடுத்துட்டு போ". இது மாஸ்டர்.

scene 2:

office முடிஞ்சி bus-ல வரேன். ரோட்டோரத்தில ஒரு சின்ன பையன் அவனை விட ரெண்டு மடங்கு எடையுள்ள புத்தக மூட்டைய தூக்கிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து போறான். இவனும் ஐந்தாவதுதான் படிக்கனும். அந்த பக்கம் வரும் motoristகிட்ட எல்லாம் கைய காட்டி lift கேட்கிறான்.

யாரும் நிறுத்தல. ஆனாலும் அவன் முகத்தில கவலை இல்ல. ஒவ்வொரு தடவை lift மறுக்கப்படும் போதும் சிரிச்சிக்கிட்டே தள்ளாடி நடக்கிறான். நான் பார்த்த வரைக்கும் ஒரு 10 பேர்கிட்ட கேட்டான்

ஒருத்தர் கூட தரலை. ஏன் நிறுத்த கூட try பண்ணல.

-------------

ரெண்டு பேர் வெட்டிக்கிட்டு சாகும் போது எனக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனா இது மாதிரி நிகழ்வுகள் என்னை உலுக்கிடுது.

காசு மட்டுமே துரத்துர மனிதர்களின் இதயம் கூட concrete கல் தான் போல.

Thursday, April 05, 2007

இன்றைய பாட்டு

நிறைய நாள், நாம எழுந்திருக்கும் போதே ஏதாச்சும் ஒரு பாட்டோட எழுந்திருப்போம். அன்னைக்கு full-a அந்த பாட்ட humm பண்ணிக்கிட்டே இருப்போம். பக்கத்துல இருக்கறவங்க "லூசாப்பா நீ" look விடுவாங்க. அதை எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு பாடும்வோம் பாருங்க...அங்க நிக்கிது அந்த பாட்டு.

அப்படி ஒரு பாட்டுதான் இது. ஏன் இந்த பாட்டுன்னு தெரியல(ஒருவேளை SKM madam blog-la படிச்ச positiveவோட தாக்கமா இருக்குமோ) .

அப்பு படத்தில எல்லாமே நல்ல பாடல்கள் தான், but my fav is this one. நமக்கு எப்பவும் தத்துவத்தை wholesale-ல் sponser செய்யும் வைரமுத்து தான் இந்த பாட்டையும் எழுதி இருக்கார்.

[கேளுங்க]

வாடா...வா

[படிங்க]

[பல்லவி]

அம்பது ரூபா தான்
அம்பது ரூபா தான்
நண்பா, என் தேவை எல்லாம் நாளுக்கொரு
அம்பது ரூபா தான்

வாடா வா...நீ...வாடா வா
வாடா வா...நீ...வாடா வா

ஆசை இல்லை, அவஸ்த்தை இல்லையே
நீ...வாடா வா
ஆஸ்தி இல்லை, அச்சம் இல்லையே
நீ...வாடா வா


உன் ஒரு நாளை
உன் ஒரு வாழ்வாய்
கொண்டாடு...வா

பாதத்துக்கு செருப்பிருந்தா பாதை எல்லாம் மெத்தைதான்
போதுமென்ற மனம் இருந்தா பூமி எல்லாம் சொர்க்கம்தான்


[அம்பது ரூபா தான்...]

[சரணம் 1]

வயிறு என்னும் பள்ளத்துக்குள்ள வாழ்க்கையை தொலச்சோம்
வாழ்க்கையை தொலச்சோம்
வயித்தவிட்டு இதயம் என்னும் வீட்டுக்கு வருவோம்
வீட்டுக்கு வருவோம்

தேய்பிறையால் தான் பௌனர்மிக்கு பெருமை
துன்பத்துக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை


புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூளப்பா
பறவைக்கு வானத்தில் மேடுபள்ளம் ஏதப்பா

லட்சியம் ஏதுமில்லை அன்னனைக்கு வாழப்பாரப்பா

[அம்பது ரூபா தான்...]

[சரணம் 2]

குழந்தைகளாய் இருக்கையிலே கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே
குழந்தை மனம் தொலைந்தனால் வந்ததிந்த தொல்லையே
வந்ததிந்த தொல்லையே

நரகத்தில இன்பம் காணும் குழந்தையின் வயசு
சொர்க்கத்திலும் துன்பம் காணும் மனிதனின் மனசு


பூமி எல்லாம் கடலென்றால், நீ மீனாகத்தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால், நீ புல்லாங்குழல் ஆகனும்

[அம்பது ரூபா தான்...]


p.s: இதுக்கெல்லாம் என்னடா comment போடுறதுன்னு கேடகறீங்களா. பாட்ட பத்தி, பாடினவங்கள பத்தி, இந்த படத்தில மட்டும் அழகா இருந்த தேவயானி பத்தி, எங்க இருந்துதான் சுடுறாறுன்னு தெரியாம் வஸந்த் படத்துக்கு மட்டும் சூப்பரா சுடுற தேவா பத்தி, ரொம்ப தைரியமா ரெண்டு heroine (அட, பிரசாந்த் தான் இன்னொரு heroineன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய போகுதா என்ன) வச்சி படம் எடுத்த வஸந்த் பத்தி, உங்களுக்கு இந்த பாட்டு ஏன் பிடிக்(கும்/காது) பத்தி, அட, எதுவுமே தோனலனா இப்படி எல்லாம் blog உலகத்துக்கு சேவை செய்யற என்ன பத்தி(???). இப்படி எத பத்தியாச்சும் comment போட்டுட்டு போங்கப்பா :-)

Saturday, March 31, 2007

படித்ததில் பிடித்தது

மரம் சும்மா இருந்தாலும்

        காற்று விடுவதில்லை

மனம் சும்மா இருந்தாலும்

        காதல் விடுவதில்லை !


உதிர்த்தவர்: கரு.பழனியப்பன் (directors எல்லாம் வெளிநாட்டில room போட்டு ஏன் யோசிக்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது).

படிச்சவுடனே share பண்ணனும்னு தோணிச்சி, அதான் உடனே போஸ்ட்டிடேன்.

மக்கள்ஸ், இந்த postக்கு comment போட்டுகிட்டே இருப்பீங்களாம், நான் அதுக்குள்ள அந்த post commentsக்கு பதில் போட்டு விடுவேனாம்.

ஆங், சொல்ல மறந்துட்டேன். போன postக்கே இன்னும் நிறைய பேர் மொய் எழுதல. மறக்காம அங்கயும் எழுதிடுங்க. இதான் சாக்குன்னு இங்க மட்டும் எழுதிட்டு போக கூடாது.

(எப்படிடா பரணி.....பிண்ற. என்னவோ போடா)

Thursday, March 29, 2007

வர வர வர எல்லாமே weird

ஏற்கனவே காதல் யானை வளர்க்கும் பிரியா ஒரு தடவை tag செய்து என்னுடைய பயங்கரமான ஒரு weird பத்தி இங்கே எழுதியிருந்தாலும், இப்ப பாடும் நிலா மருதம் பாசத்தோட tag செய்திருக்காங்க. பாசத்துக்கு நான் அடிமை (மனசாட்சி: டேய் அடங்குடா, too muchஆ பேசாத). weirdக்கா பஞ்சம். So again, மருதம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு, start meejic...

1. என்னோட பேசும் போது நீங்க உங்க கையால என்ன பண்றீங்களோ, நானும் அதே செய்வேன். நீங்க சொடக்கு போட்டுகிட்டே பேசினா, நானும். நீங்க கையை கட்டிகிட்டு பேசினா, நானும். நீங்க தலை கோதிக்கிட்டே பேசினா, நானும். நீங்க சொறிஞ்சிக்கிட்டே பேசினா....but நீங்க கபால்ன்னு பாஞ்சி என்னோட கையை புடிச்சிக்கிட்டா...me the surrender.

first இது மத்தவங்களோட weirdன்னு நெனச்சேன். அப்பாலதான் புரிஞ்சிது இது நம்மளோடதுன்னு.

2. எனக்கு ஒப்பாரி பாடல்கள் பிடிக்கும் (சரி, சரி...அந்த look வேண்டாம்). sampleக்கு சொல்லனும்னா, பம்மல் k சம்மந்தத்தில் வரும் "ஏண்டி சூடாமனி"யும், விருமாண்டியில் வரும் "மாட விளக்க" பாட்டும் என்னோட fav. இந்த பாட்டயெல்லாம் rewind பண்ணி, rewind பண்ணி கேட்டப்ப என்ன கொல்ல வந்துட்டானுங்கோ என்னோட "உயிர் நண்பர்கள்".

but, என் மனதின் ஏதோ ஒரு வெற்றிடத்தை இந்த பாடல்கள் நிரப்புகின்றன.

3. "ஏண்டா பரணி, சிம்ஸும், சரத்தும் boxing போட்டிக்கிட்டே ஆடுவாங்களே அது என்ன பாட்டு."
"டேய், அது அடிக்கிற கை அனைக்குமா-டா, நட்புக்காக படத்துல வரும்".
"excuse me bharani, நேத்து java 5 traningல boxing feature பத்தி சொன்னாங்களாமே, கொஞ்சம் சொல்லு".
"Oops...sorry sir, மறந்திட்டேன்".

அதே தான். எது ஞாபகத்தில் இருக்க வேண்டுமோ அத correctஆ மறந்துடுவேன். எத மறக்கனுமோ அத மறக்கவே மாட்டேன். இதனாலயே நான் interview attend பண்றதில்ல. நாலு வருஷமா ஒரே companyல இருக்கேன்னா பாருங்க :(

4. என்ன யோசிக்க வைக்கிறது ரொம்ப குஷ்டம், சே, கஷ்டம். ஒரு பத்து மணி நேரம் விட்டத்த பார்த்துக்கிட்டே, Einstein look விட்டுகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்னடா யோசிக்கிறேன்னு யாரச்சும் கேட்டா no answer. (மனசாட்சி: 'பையித்தியக்கார பய'னு சொல்லுவாங்க, அத சொல்ல மாட்றான் இந்த dog).

இதனாலயே என்னிடம் நீங்கள் எது பற்றி கருத்து கேட்டாலும், அதற்கு positive பதில்தான் கிடைக்கும்.

5. எல்லாரும் night கண்ணு முழிச்சி படிக்க tea குடிப்பாங்க. நான் நல்லா தூங்கறதுக்கு tea குடிப்பேன். (ஹி...ஹி...நீங்க நெனக்கறது புரியுது. but என்ன செய்ய). college daysல எல்லாரும் night 1 மணிக்கு போய் tea அடிச்சிட்டு வருவோம். வந்து எல்லாரும் சுறுசுறுப்பா book எடுப்பானுங்க. நான் அப்படியே படுத்து கொறட்ட விடுவேன் பாருங்க...எல்லாரும் ஒன்னு கூடிடுவானுங்க பொது மாத்துக்கு :)

இப்ப கூட second shift போயிட்டு 12 மணிக்கு வரும் போது, நாயர் கடையில எறங்கி ஒரு SP அடிச்சிட்டு வீட்டுக்கு போய் படுத்தா....சொர்க்கம் :)

சிரி(ங்க) மக்களே, இத இன்னும் அஞ்சி பேரு தலையில கட்டணும். எனக்கு தெரிஞ்சி நிறைய பேர் இத எழுதிட்டாங்க. இருந்தாலும் me tagging

1. Ace (அண்ணே, நீங்க இன்னும் எழுதல இல்ல)
2. Arun (எப்படி அடுத்த postக்கு matter குடுத்தேன், பார்த்தீங்களா)
3. DD (சிஸ்டர், fotoலயே கூட நீங்க எழுதலாம்)
4. Filbert (கண்டிப்பா எழுதிடுங்க, இந்த titleக்காகவாவது :-))
5. Mgnithi (உனக்கு தனியா வேற சொல்லனுமாடா)



Update: @இதுவரை_comment_போட்ட_பாச_மலர்களே....5வது weird சற்றே sentiயாக போனதால், அதற்கு பதிலாக வேறொரு wierd (நான் தான் சொன்னேல்ல...weirdக்கு பஞ்சமில்லைன்னு) போட்டிருக்கேன். அதையும் படிச்சிட்டு புதுசா comment போடுங்க. (மனசாட்சி: ஏண்டா, comment வாங்கறதுக்கு இதெல்லாம் ஒரு வழியா, உருப்படவே மாட்ட நீ...)

Wednesday, March 28, 2007

திங்கள் கிழமைகள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கும் திங்கட்கிழமைக்கும் நட்பிருந்ததாக நினைவில்லை. முடிந்த ஞாயிறின் மிச்சமாகத்தான் இருந்திருக்கின்றன் பாதி திங்கள்கள். பள்ளி, கல்லூரி நாட்களில் "அய்யோடா திங்கள் வந்துவிட்டதே" என்று ஆயாசமாகத்தான் இருக்கும். வகுப்பில் அதிகம் தூங்கியது திங்கட்கிழமைகளில்தான். திங்களன்று நடந்த தேர்வுகளை சரியாக எழுதியதில்லை.

எந்த புதிய வேலையையும் ஆரம்பிக்க திங்கள் வரை தள்ளிப்போடுபவன் நான். கோச்சிங் சேர வேண்டுமா, வாக்கிங் போக வேண்டுமா, புது பாடம் படிக்க வேண்டுமா, இன்னும் ஏன், ஒரு பெண்ணிடம் புதிதாக பேச வேண்டுமா...திங்களில் தான் ஆரம்பம். இப்படி நான் பார்த்து பார்த்து திங்களில் ஆரம்பிக்கும் வேலைகள் பெரும்பாலும் புதனுக்கு மேல் தொடர்ந்ததில்லை. அதனாலேயே திங்கள் பிடிக்காது எனக்கு.

நட்பு இழந்த திங்கள், பரீட்சைக்கு பயந்து அழுத திங்கள், மிகவும் எதிர்ப்பார்த்து மருத்துவம் கிடைக்காத திங்கள், விளையாட்டாய் பேசிய பேச்சொன்று விபரீதத்தில் முடிந்த திங்கள், விபரம் தெரிந்து அம்மாவிடம் அழுத திங்கள் என்று வாழ்வு முழுவதும் மறக்க முடியாத திங்கள்கள் நிறைய.

ட்யூஷன் தோழிக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுக்க காத்திருந்த திங்கள், நண்பர்களுடன் விடிய விடிய கதை பேசியபடியே விடிந்த திங்கள், வெள்ளி இரவு முழுதும் பேசிய பின்னும், குறைந்த எதோ ஒன்றை பேச காத்திருந்த திங்கள் என்று ஐஸ்கீரிம் தலை செரிப்பழ திங்கள்களும் உண்டு.

ஞாயிறுக்கு பிறகு ஏன் செவ்வாய் வரக்கூடாது என்பது எனது நீண்ட நாள் கனவு.

பாருங்கள், திங்கள் பற்றிய பதிவை செவ்வாய்கிழமை போடும் அளவு திங்களை வெறுப்பவன் நான்.

Thursday, March 22, 2007

cocktail

ஒரு தத்துவம்

எல்லா வெளிச்சமும் இருளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன! (இது மாதிரி எல்லாம் தத்துவம் சுட்டு எவ்ளோ நாளாச்சி கடவுளே)

ஒரு வசனம்

காதலன்(இவர் கவிதை எழுதரவராம்): உனக்கு என்னை பிடிக்குமா, என் கவிதையை பிடிக்குமா?
(பயங்கர புத்திசாலித்தனமா கேள்வி கேட்கிறாராம், அண்ணாத்த)

காதலி: எனக்கு கவிஞனை பிடிக்கும் !
(அண்ணி வச்சாங்க சூப்பர் ஆப்பு)

ஒரு பாட்டு

ஆண்: நீ தாய்மொழி பேசிடும்போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு
பாவமா இருக்கு

பெண்: நீ என்னிடம் பேசிடும்போது
மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு
பயமா இருக்கு

ஒரு சினிக்கூ

நீரின் தோளில்
கை போடும்
ஒரு
சின்னத் தீயின்
கதை...

காதல்

பி.கு: மக்களே, உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் (இந்த matter எல்லாம் நான் படித்தது and கேட்டது) இது எதுவுமே என்னோடது இல்லனு...அதுக்காக comment போடாம போயிடாதீங்க...இவற்றின் sourceஐ கூட நீங்க commenta போடாலாம்...எப்படி எல்லாம் idea தரேன் பாருங்க comment போட :)

Friday, March 16, 2007

கிறுக்கல்ஸ்

வழி வழியாய்
தேவதைகளுக்கெல்லாம்
ஒரே வேலைதான்
விழி வழியாய்
இதயம் திருடுவது


விண் நோக்கி போவதெல்லாம்
மண் நோக்கி திரும்புவது
ஈர்ப்பு விதி என்றால்
உன்
கண் நோக்கி போகும்
இதயம் திரும்பாமலே
இருப்பது என்ன
விதி


உன்
விரல் பிடித்து
நடக்க
காத்திருக்கிறேன் நான்
உன்
நிழல் பிடித்து
நடக்கிறது என்
இதயம்


ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டாம்
நான் பார்க்கிறேன்
நீ முறைக்கிறாய்


உன் கண்
பார்க்கும் பொழுது
நீ மண்
பார்க்கிறாய்
நீ மண்
பார்க்கும் பொழுது
வெட்கத்தில் சிவக்கும்
மண்
செம்மண் ஆகிறது


உன்னை காதலிக்காமல்
இருப்பது நரகம்
உன்னை காதலித்து
இறப்பது சொர்க்கம்


காதல் எனும்
கண்ணாம்மூச்சி
விளையாட்டில்
என் கண்ணை
கட்டிவிட்டு காணாமல்
போனவள்
நீ


மாதா
பிதா
குரு
காதல்



பி.கு: உங்களை எல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு. என்ன பண்ண. போன ஜென்மத்துல ஏதோ பயங்கர பாவம் பண்ணியிருக்கீய. வந்ததுதான் வந்துட்டீக, commentitu போங்க:)

Saturday, March 10, 2007

தீவாளி தத்துவங்கள்

"சுனாமி வருன்னு தெரிஞ்சே சுண்டல் விக்க வந்துருக்கானுங்கோ"

"இவனுங்களுக்கு விதி video games ஆடுது மாமு"

"பில்லு அடிச்சா செவுலு அவுலாயிடும், ஈரல் கீறலாயிடும்"

"சொந்த காசுல சூனியம் வச்சிக்காத மாமு"


இன்னாடா இவன் காக்கா வலி வந்தவன் கணக்கா கூவிகினு இருக்கானேனு மெர்சலாயிட்டீங்களா, காக்கா வலி இல்ல நைனா, தீவாளி.

தீவாளி, தீவாளின்னு ஒரு தலவலி பட்துலதான் இந்த பில்டப்பு டயலாக்கு எல்லாம். heroக்குதான் இத்தா தாண்டி பில்டப்பும். ஆனா காசு குட்த்து பாக்க வந்த நம்மல பாத்து கூவுற மாரியே இர்க்குபா. அத்தும் அந்த நாலம் டயலாக்கு நம்க்குதான்.

போன எட்துல பொங்கலு, சே, தீவாளி குட்த்துடானுங்கோ.

இன்னாத்துக்கு இந்த பட்துக்கு தீவாளினு name வச்சானுங்கோ. டைரக்குடக்கரு பொற்கொடி post பாத்து conceptஅ கபால் பண்ணிட்டாரு போல...ஹி...ஹி

சீக்காளி மாரி இருக்ர பட்துல சோக்காளி கணக்கா இருக்ர ஒரே matter, நம்ம டாவுதான். இன்னா அழ்கு, இன்னா அழ்கு. ஆன்னு பாக்கசொல்ல ஈ ஒன்னு வாயாண்ட போயிடிச்சிபா...அக்..கும்


ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்மீண் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ...என்ன நீ


பி.கு: கபிலன் நம்ம டாவுக்குன்னே ஷோக்கா எழுதிகின பாட்ல வர்ர lines இது நைனா. இன்னாமா எழுதறாங்கோ. எல்லாம் மொக ராசி.

ஏண்டா கசுமாலம், நீ ஜொள்றதுக்கு ஒரு போஸ்டா. நீ சரக்கு அடிக்க நாங்க ஊறுகாயான்னு கோச்சிகாம comment வாரி குட்த்துட்டு போங்க சாமிங்களா :)

Wednesday, February 28, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர்ச்சி

*** நம் துணை முதல்வர் தொடரும் உளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி) படிக்க கிளிக்கவும் ***


இரும்பில் இதயம்
எனக்கு
காந்த விழிகள்
உனக்கு

கண்ணன் வாயில்
உலகம் பார்த்த யசோதைக்கு
தெரியாது
உன் கண்ணை பார்த்தால்
கண்ணனே தெரிவான்
என்று

உன்னை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
என்றில்லை எனக்கு
உன் பார்வை படும்
இடத்தில் இருக்க வேண்டும்
அவ்வளவு தான்

உன்
eye pass
செய்ததால் வந்த
heart attackற்கு
இப்பொழுது
bypass
செய்கிறார்கள்

விழும் பொழுதெல்லாம்
எழ வேண்டும் என்றவனுக்கு
விவரம் தெரியாது
உன் விழிகளில்
விழுந்தால் எழவே
முடியாதென்பது

நாம் சதுரங்கம் ஆடுகையில்
மட்டும்
என் சேனைகள் எல்லாம்
எனக்கெதிரே

நீ பல்லாங்குழி
ஆடுகையில்
பள்ளங்கள் என்
உள்ளத்தில்

நடந்ததை எல்லாம்
நண்பனிடம் கூறினால்
'எல்லாம் விதி' என்கிறான்

இப்பொழுது புரிந்ததடி
விதி என்பது
உன்
விழியின் இன்னொரு
பெயர்!

P.S: நான்காவது. மிச்சம் மீதி இருப்பவர்கள் comment போட்டுட்டு போங்க. மாம்ஸ், உங்க தலைப்பை உங்கள் அனுமதி இல்லாமல் சுட்டுட்டேன். excuse for that. அப்பால நான் உத்தரவு வாங்கிக்கறேன் :)


Update: இந்த relay கவிதையை (???) நம் கட்சியின் கொ.ப.செயும், துணை முதல்வருமான வேதா அவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன் (கரகோஷம்...)அமைதி, அமைதி. அடுத்து நம் கட்சியின் சிங்கங்கள் அனைவரும் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்..... ஹி...ஹி....

Sunday, February 25, 2007

மொழி


வாழ்வின் அழகை, அதன் positivityயை, அதில் இழையோடும் மென்சோகத்தை,அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய நகைச்சுவையை அப்படியே சொல்லும் தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி நம் மனசோடு பேசும் படம் தான் மொழி. Hats Off to RadhaMohan and Prakashraj.

இந்த post படத்துக்கான review அல்ல. உங்களை பார்க்க தூண்டும் ஒரு முயற்சி :)

Jo is deaf and dumb.
பிரகாஷ்ராஜ்: அர்ச்சனா, இசைன்னா உனக்கு என்ன?
ஜோ சைகை பாஷையில் சொல்றாங்க. ஸ்வர்னமால்யா அதை வார்த்தையில சொல்றாங்க....
ஜோ: இசைங்கறது எனக்கு ஒரு மொழி மாதிரி. எனக்கு ஹிந்தி தெரியாது. சைனீஸ் தெரியாது. அது மாதிரி இசையும் தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது.
எல்லாரும் ஜோவையே அது என்னன்னு பார்க்க....
ஜோ: அது மௌனம்

ஜோ, பிருத்திராஜோட காதலை accept பண்ணிக்கவே மாட்றாங்க. She has her own insecurity. climaxக்கு முன்னாடி ஒரு scene.

பிருத்திவிராஜ்: வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித்தான் ஆகனும். நாம பண்ற தப்ப உணர்ந்து திருத்திக்கலன்னா, பின்னாடி அத சரி செய்யறதுக்கான ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே போயிடலாம்.

இசை எப்படி இருக்குன்னு ஜோ கேட்க, பிருத்திவிராஜ் அவங்க கையை speakerல வச்சி explain பண்ற மாதிரி ஒரு பயங்கர emotional scene வரும். THE ultimate scene of the movie.

தமிழ் சினிமா உயிரோடு இருப்பதற்கு மொழி மாதிரி படங்கள் தான் காரணம்.இந்த மாதிரி படங்கள் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காகவாவது எல்லோரும் பார்க்கனும்.

மொழி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தை விரும்பாதவர்கள் மட்டமான தமிழ் சினிமாவிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

Friday, February 23, 2007

கேட்கலாம், படிக்கலாம் (exam எல்லாம் கிடையாது)

விரும்புகிறேன் படத்தில் வரும் ஒரு அழகான பாடல் இது. தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, ஆனா சூப்பரா அடிச்சி இருப்பார். வழக்கம் போல் வைரமுத்து அசத்த, உன்னிமேனன் குரலில்...

கேட்டு ரசிக்க

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5610/

1. மேலே உள்ள லின்கை கிளிக்கவும்.
2. விரியும் பக்கத்தில் "துடுக் துடுக்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் லின்கை மீண்டும் கிளிக்கவும் .

படித்து ரசிக்க

[பல்லவிக்கு முன்] (பல் வலிக்கு முன் இல்லீங்கோ)

கடைக்கண் பார்வைதனை கண்ணியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்
(இந்த portion மட்டும் பாவேந்தருடையது)

[பல்லவி]

ஒத்த பார்வை பார்த்தா
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா

பார்வை பட்ட இடத்தில்
புதுசா ரத்தம் ஊறுதாத்தா


முன்னால வந்தாயே
தன்னால ஜெயிச்சிபுட்டேன்

மின்னலாய் போனாயே
இதயத்தை தொலச்சிபுட்டேன்

[சரணம் 1]

வா வா என்று நான் கேட்ட போதும்
வந்தேன் என்று நீ தாவவில்லை

வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நானம் தாண்டி வெளியேரவில்லை


ஆகையினால் அடி
விரும்புகிறேன்

அரும்பு மலரும் வசந்த காலம்
ஆசை மலரும் கார் காலம்

அன்பு மலரும் ஆறு காலம்
ஒரு கண்ணில் இரு கண்ணில்

உலவ கண்டதால்
விரும்புகிறேன்

[முன்னால வந்தாயே...]

[சரண்ம் 2]

அசர வைக்கும் உயரமும் நீ இல்லை
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை
வசதிப்பட்ட உசரம்

என்பதனால் அடி ரதியே
விரும்புகிறேன்

கிளைகள் வேறு இருவருக்கும்
கூடுகள் வேறு இருவருக்கும்
பறக்கும் திசைமட்டும்

ஒன்றாய் இருப்பதானாலே
விரும்புகிறேன்


[முன்னால வந்தாயே...]

[சரணம் 3]

பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே
காதல் வருமென்று நினைத்ததில்லையே
உன்னை கண்டதும்

என் கருத்து மாறியதால்
விரும்புகிறேன்

[ஒத்த பார்வை...]

பி.கு: வர வர ரொம்ப வறட்சியா போச்சி...அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....நீங்க அடிக்க வரதுக்குள்ள escappppuuuu :)

Thursday, February 15, 2007

Fw: Indian Grasshoppers

OLD VERSION

The ant works hard in the withering heat all summer long building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away. Come winter,the ant is warm and well fed. The grasshopper has no food or shelter so he dies out in the cold.

MODERN VERSION

The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies forthe winter. The grasshopper thinks the ant's a fooland laughs & dances & plays the summer away. Come winter, the shivering grasshopper calls a press conference and demands to know why the ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering grasshopper next to a video of the ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the ant's house.

Megha Patkar goes on a fast along with other grasshoppers demanding that grasshoppers be relocated to warmer climates during winter.

Amnesty International and Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance).

Opposition MP's stage a walkout.

Left parties call for "Bharat Bandh" in West Bengal and Kerala demanding a Judicial inquiry.

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among ants and grasshoppers.

Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the Prevention of Terrorism against Grasshoppers Act [POTAGA]", with effect from the beginning of the winter.

Arjun Singh makes Special Reservation for Grasshopper in educational Institutions & in Govt Services.

The ant is fined for failing to comply with POTAGA and, having nothing left to pay his retroactive taxes,his home is confiscated by the Government and handedover to the grasshopper in a ceremony covered by NDTV.

Arundhati Roy calls it "a triumph of justice".

Lalu calls it 'Socialistic Justice'.

CPM calls it the 'revolutionary resurgence of thedowntrodden'

Koffi Annan invites the grasshopper to address the UN General Assembly.

Many years later...

The ant has since migrated to the US and set up a multi billion dollar company in silicon valley.

100s of grasshoppers still die of starvation despite reservation somewhere in India...

As a result of loosing a lot of hard working ants and feeding the grasshoppers, India is still a developing country...


Courtesy: Forward mail from a friend

Feb 14 - End Of The Day

Over hype குடுத்து ஓடாத தமிழ் படம் மாதிரியே முடிந்தது இன்றைய தினம். Period.

Wednesday, February 14, 2007

Feb 14 - Start Of The Day

காதலிப்பதும் காதலிக்கப்படுவதையும் விட அழகிய நிகழ்வுகள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை பராபரமே.

ஆதலினால் காதல் செய்வீர் !

Friday, February 09, 2007

விழியில் விழுந்து

ஊமை மனம்
ஊசியேற்றியது பார்வை
உன் கண்கள் தான்
முதலில் சொல்லியது

பேசியது உன் தோழியிடம்
கேட்டது நீ
ஒட்டுக்கேட்ட காதுகள்
அடுத்து

அறிமுகம்
குலுக்கிய கைகள்
காட்டிக்கொடுத்தன

கொலுசின் சிணுங்கல்
முதல்நாள் என் செல்போன்
ஒலிக்கும் போதெல்லாம்
மறுநாள் நீ
நடக்கும் போதெல்லாம்

இல்லாத போது
இருக்கை பார்க்கும்
வராத நாட்களில்
வாசல் பார்க்கும்

உன் உள்ளம் கூட
சொல்லிவிட்டதடி
உன் உதடுகளுக்கு
எப்பொழுது திறப்புவிழா

காதல் வந்தால்
கணுக்கால் நகம் கூட
காட்டிக்கொடுக்குமா என்ன

வள்ளுவன்
இப்படித்தான் சொல்லியிருக்க
வேண்டும்

காதலுக்கும் உண்டோ
அடைக்குந்தாழ் !

P.S: மூன்றாவது. முதல் இரண்டில் தப்பித்தவர்கள் இதை படித்து mental ஆகக்கடவது.

Thursday, February 08, 2007

இதுக்கு என்ன title வைக்கிறது

"shall i teach you
shall i teach you
come gentle come close

shall i scoop and give
shall i scoop and give
beauty wont exhausted when scooped"

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வரிகள் are english subtitles for the song "sollitharava" from "Majaa" in ayngaran DVD.

பூமாதேவி வாய திறக்கப்போற நேரம் நெருங்கிடுச்சோ???

Wednesday, February 07, 2007

பாட்டு மச்சி பாட்டு

Another superb song of this season. Movie: pori. A simple tune by Dhina, powered by an amazing lyric of Yugabharathi. Madhu balakrishnan's voice adds to the class. மிஸ் பண்ணாம கேளுங்க.


கேட்டு ரசிக்க

பேருந்தில் நீ

படித்து ரசிக்க

[பல்லவி]

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

[சரணம் 1]

பயணித்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே


தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ....தானே


[பேருந்தில் நீ....]

[சரணம் 2]

தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு


தேய்பிறை போல்தொடும் நகக் கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே


பிடித்ததும் தருகிற பரிசு பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே


[பேருந்தில் நீ....]

Tuesday, February 06, 2007

புதிய பாதை

Intro

என்னடா இது நம்ம blogல நிறைய post கத்திரிக்காய் பத்தியே இருக்கேன்னு எனக்கு ஒரு வருத்தம் இருக்கறதுனாலயும், நீங்களும் அதை கேட்க நினைத்து கேட்காமல் போனது எனக்கு கேட்டதுனாலயும் இந்த வாரம் நாட்டு நடப்பு. அதுவும் முல்லை பெரியார் விவகாரம் பத்தி பார்ப்போம்.

Background

மணிரத்னத்தோட அடுத்த படம் முல்லை பெரியார் base பண்ணின்னு கேள்விப்பட்டு அவர்கிட்ட assistanta சேரலாம்ன்னு போனேன். படத்துல வைக்கிற மாதிரி ஒரு scene சொல்லு பார்க்கலாம்ன்னு சொன்னார்.

சொல்றேன் சார். சொல்றேன். silver jubilee scene ஒன்னு சொல்றேன்.

Scene

சாருஹாசன் வீட்ல மாப்பிள்ளை கேட்டு மம்முட்டியும், கீதாவும் போறாங்க. அப்ப

சாரு: "முல்லைங்கறது யாரு. என்ன குலம். என்ன கோத்திரம். அவளுக்கு எதுக்கு என் புள்ளையாண்டான் பெரியார குடுக்கனும்".

மம்மு: "தெருவுல முழம் அஞ்சு ரூவான்னு விப்பாங்களே தெரியாது அதான் முல்லை. யோவ் நீ இன்னும் 'தளபதி'ய விட்டு வரலயா. தலைவர் இப்ப 'சிவாஜி'ல இருக்காரு. கொஞ்சம் வூட்ட வுட்டு வெளிய வா".

கீதா: "முல்லை எங்களோட ஒரே bunன்னு, சே, பொண்ணு"

சாரு: "உங்க பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. salman, vivek oberaiன்னு சுத்திட்டு இப்ப என் பையனை கட்டிப்பேன்னா எப்படி நம்பறது".

மம்மு: "ஆமாம் உன் பையன் மட்டும், karishma, raniன்னு சுத்திட்டுதான எம் பொண்ணுகூட சுத்தினான். உம் பையனை கட்டிகிறதே ஒரு பெரிய தோஷம். இதுல எம் பொண்ணுக்கு தோஷம்ன்னு கோயில் கோயிலா கூட்டிட்டு போயி கொல்றான். முடிவா என்ன சொல்ற?"

சாரு: "நான் உயிரோட இருக்கற வரைக்கும் இது நடக்காது."

மம்மு: "அப்ப இன்னைக்கு உன்னை முடிக்கிறேன். நாளைக்கு கல்யானத்த முடிக்கிறேன்."

மம்முட்டி துண்டை தூக்கி போட, AR Rahman music-la "முல்லை....பெரியார்....முல்லை....பெரியார்"...பயங்கர sound-oda ஒரு background score பண்றோம்.

Conclusion

நான்: "எப்படி சார் scene."

மணி: "டேய் முல்லை பெரியார்ன்னா என்னனு தெரியுமா உனக்கு".

நான்: "நம்ம hero, heroine பேரு தானே. கொஞ்சம் old nameஆ இருக்கே சார். அபிஷேக்குக்கும், ஐஸுக்கும் suit ஆகுமா சார்".

மணி: "அடப்பாவி அடப்பாவி. court, case, வக்கீல், வாய்தான்னு அரசாங்கமே அல்லோட படுது. 10 assistants வச்சி அதை எல்லாம் daily படிச்சி, 10 கோடி budgetல படம் plan பண்ணினா, simple-a hero, heroineக்கு பேர்ன்னு சொல்லிட்டியேடா. "

"Security, இவன தூக்கி வெளியபோடுங்க".

நான்: "சார், சார்...நான் அப்பவே சொன்னேன் சார். இது எல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு. இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்."

"சார்...சார்....சா.....door lock"

Thursday, February 01, 2007

காலை எழுந்தவுடன் காதல்

பூக்கள் அற்ற
ஒரு தேசத்தில்
உன் பாதச் சுவடுகளை
இறைத்துவிட்டு வா
பசி தீர்த்துக்கொள்ளட்டும்
பட்டாம்பூச்சிகள்



நடை வண்டியென
உன்
கண்களைப் பிடித்தபடி
கற்றுக்கொள்கிறேன்
காதலை



நீ
பிடித்து வரும்
குடையில்
ஒரு குழந்தையென
சறுக்கி விளையாடுகிறது
மழை


ரொம்ப நாள் கழிச்சி எல்லாரோட blog பக்கம் போய் நம்ம மாம்ஸ், dreamzz, பொற்கொடி எல்லாரும் காதலை பத்தி கலந்து கட்டி எழுதினத படிச்சிட்டு, இந்த வாரம் விகடன் book எடுத்தா அதுலயும் காதல் கவிதைகள். அப்பாடா நம்ம அடுத்த postக்கு matter readyன்னு அத சுட்டு மேல போட்டுட்டு FM போட்டா அதுல நம்ம வைரமுத்து SPB voiceல என்ன சொல்றார்னா

மருந்துகள் இல்லா
தேசத்தில் கூட
மைவிழி பார்வைகள்
போதும்

என்னடா இது ஒரே காதல் மயமா இருக்குன்னு தேதியா பார்த்தா Feb 1. நம்ம அல்வா dayக்கு இன்னும் 14 daysதான் இருக்கு.

மனசாட்சி: டேய், டேய் அடங்குடா. இன்னைக்குதான் தேதி 1. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா?

அதனால என்ன. தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா. அது மாதிரிதான். இப்பவே ஆரம்பிச்சாதான் இந்த வருஷமாச்சும் நல்லது எதாவது நடக்கும்.

மனசாட்சி: நடக்கும் நடக்கும். நீ ஜொள்ளு வுடுறியே அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்கும். நீ அடுத்த வருஷமும் இதே மாதிரி postதான் போடனும்.

உனக்கு பொறாமை.

மனசாட்சி: ஆமாம் எனக்கு பொறாமை. இவனுக்கு கல் ஆமை. போயி பொழப்ப பாருடா

யார வேனா எமாத்திடலாம். ஆனா மனசாட்சிய மட்டும் முடியல (மனசாட்சி: cycle gapla அய்யா தத்துவம் சொல்லிட்டாரு. எல்லாரும் கேட்டுக்கங்க. தத்துவம் சொல்ற மூஞ்ச பாரு....!#$%^%&)

P.S: மக்களே, officeல் ஆணிகள் சற்று அதிகம் ஆகிவிட்டதால் கொஞ்சம் attendance irregulara இருக்கும். மன்னிச்சிக்கங்க. முடிஞ்ச வரை வந்து எல்லாரையும் பார்த்துட்டு போறேன்.

கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இத்தோட அப்பீட்டு :)

இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. ஒரு பாட்டு கேட்டுட்டு போங்க.

Era Nila

Tuesday, January 16, 2007

வானவில்லின் துண்டொன்று

நீ பிறந்தது
தேவலோகம் தான்

உன் பாதம் பட்ட
இடத்தில் தோன்றினார்கள்
தேவர்கள்
பிரம்மாவின் வேலை போனது

உன் உள்ளங்கை
உஷ்ணத்தில் உறங்கிவிட்டனர்
ஐயகோ திருமாலின் வேலை

உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து

நீ பேசினாய்
வேதம் படிக்க ஆரம்பித்தனர்
சரஸ்வதி அச்சம் கொண்டாள்

சிரித்தாய்
செல்வங்கள் சேர்த்தனர்
கோபத்தில் கொதித்தாள் லட்சுமி

உன் சுண்டுவிரல்
தொட்டதில் வீரம் கொண்டனர்
பாவம் பார்வதி

எல்லா கடவுளுக்கும் வேலை போனது

பார்த்தார் பிரம்மன்

நாடு கடத்தபட்டாய்
பூலோகத்திற்கு

உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்


பி.கு: முந்தின கவிதைக்கு(???) நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனுன்னு நினைக்கும் போது உங்க கவலை தோய்ந்த முகங்கள் மனசில வந்து தடுக்குது. அதனால நிறுத்திக்கிறேன்.

யாருப்பா அது, தேங்கா மூடி தூக்கி போடுறது. நிறுத்திக்கிவோம். இத்தோட நிறுத்திக்கிவோம்.

Sunday, January 14, 2007

குடும்பத்திற்கு குண்டுவைப்போம்

வணக்கம் நேயர்களே. இது "உருப்படாத FM 111". நான் உங்க 'மொக்க' மோகன் and 'அறுவை' அருணா.

எற்கனவே மெகா சீரியல் பார்த்து சீரழிஞ்சி போகும் நம் தமிழ் மக்கள்ல, நல்லா இருக்கும் ஒன்னு ரெண்டு குடும்பத்துக்கும் குண்டுவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த 'குடும்பத்திற்கு குண்டுவைப்போம்'. வாங்க நேயர்களே நிகழ்ச்சிக்கு போவோம்.

திருமணமான தம்பதிங்க மட்டும் தான் இந்த நிகழ்ச்சிக்கு call பண்ணனும். உங்க கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் தான் call பண்ண வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் மனைவி, எதிர்வீட்டு அம்மாவோட கணவன் கூட சேர்ந்து எல்லாம் phone பண்ணக்கூடாது. அதுக்கு 'இரவோடு இரவாக'ன்னு இன்னொரு நிகழ்ச்சி night 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுக்கு phone பண்ணுங்க.

இன்றைய நிகழ்ச்சியோட situation சொல்றோம், கவனமா கேட்டுக்கோங்க. உங்க கணவரோட அம்மா ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. அவங்க நெகம் வெட்டும் போது அது light-ஆ விரல்ல பட்டு ரத்தம் வந்துடிச்சி. உடனே அது நீங்க செய்த சதிதான்னு அவங்க உங்க கணவன் கிட்ட போட்டு குடுத்துடாங்க.

இப்ப உங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற சண்டைய நீங்க தத்ரூபமா நடிச்சி காட்டனும். அப்படி சூப்பரா நடிக்கிற தம்பதிக்கு divorce வக்கீல் fees நாங்க கொடுப்போம்.


சரி first caller கிட்ட பேசுவோமா.

MM: ஹலோ, யார் பேசறீங்க?
(no sound)
AA: ஹல்ல்ல்லோ, யார் பேசறீங்க?
K(கணவன்): நீங்க சூப்பரா இருக்கீங்க மேடம். ரொம்ப நாளா try பண்றேன்.
AA: ஹ..ஹ..ஹ...அப்படியா, நான் ஏற்கனவே committed. உங்க பேர் என்ன?
K: என் பேர் அஜித் மேடம். உங்க voice சூப்பரா இருக்கு.
AA: ஹ..ஹ..ஹ...நான் பல் தேய்கறதே இல்ல. அதான்.
MM: சரி போட்டியை ஆரம்பிப்போமா?
(no sound)
AA: நிகல்ச்சிக்கு போலாமா அஜித்.
K: 'ஆழ்வார்' படத்துக்கு போலாம் மேடம்.
AA: ஹ..ஹ..ஹ...நீங்க ரொம்ப comedy-ஆ பேசறீங்க.
MM: உங்க மனைவி இருக்காங்களா, அஜித்.
K: இருக்கா இருக்கா. மேடம் நீங்களே பேசுங்க. இந்த ஆள் எதுக்கு நடுவுல மொக்க போடுறான்.
AA: உங்களுக்கு situation தெரியும்ல, ஆரம்பிங்க.

K: ஏண்டி, எங்க அம்மா ஊர்ல இருந்து வந்தா, அவங்க விரல வெட்டிடுவியா நீ.
M(மனைவி): யோவ். நான் எங்க வெட்டினேன். அவங்கதான் நெகம் வெட்டினாங்க. அதுல சும்மா ரவோண்டு கிழிச்சிடிச்சி.
K: அது எப்படிடி தானா வெட்டும். நீ எதாச்சும் பண்ணி இருப்பா.
M: ஆமாம். நான் பூரியும் மசாலாவும் பண்ணி இருக்கேன். வந்து கொட்டிக்க.
K: தாலி கட்டின புருஷன்கிட்டயே எதுத்து பேசறியா. (பொளேர்)
M: குடிகாரா. குடிகாரா, dailyகி உங்கூட இதே ரோதனையா போச்சி. உங்க ஆத்தா வெட்டிகிட்டதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்.
K: என்னடி திரும்ப திரும்ப எதுத்து பேசற. வெளிய போடி. வீட்ட விட்டு வெளிய போடி....

MM: சரி நேயர்களே. இன்னொரு குடும்பத்துக்கு குண்டு வச்சாச்சி. அந்த சந்தோஷத்த கொண்டாட இதோ ஒரு super hit பாடல்.

(அம்மாடி ஆத்தாடி....)

p.s:
நான்: தாயே, இந்த மெகா சீரியல்ல இருந்தும், phone போட்டு பாட்டு dedicate பண்ணி மக்களை கொல்ற நிகழ்ச்சியில இருந்து காப்பாத்து தாயே.
கடவுள்: மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.
நான்: ?*&%*&^%()%$##%

Happy Pongal

கும்புடறேனுங்கோ,

எல்லாருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் (உனக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்ன்னு சொல்லி என்னை கலாய்க்க கூடாது, ஆமாம்).

பொங்கலுக்கு மத்தவங்களுக்கு வெண்பொங்கல் குடுங்க, சர்க்கரை பொங்கல் குடுங்க. ஆனா அல்வா குடுத்துடாதிங்க.

பொங்கல் எதிர்பார்த்து,
பரணி

Thursday, January 11, 2007

பாட்டு மச்சி பாட்டு

Cant resist from posting this. Superb melody from Yuvan (film: deepavali) with some good lyrics from Yugabharathi and an excellent singing by Vijay Yesudass. Dont miss it.



கேட்டு ரசிக்க
Kaadhal Vaithu

படித்து ரசிக்க

[பல்லவி]

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்


காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகால் அய்யோ தொலைந்தேன்


[சரணம் 1]

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்தபின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்


[சரணம் 2]

உன்னை கண்டநாள் ஒளிவட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்

மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில்கூட ரசிக்க வைத்தாய்

Wednesday, January 10, 2007

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

லட்சம் வார்த்தைகளில் இருந்து
எழுதிக்கொண்டு வருகிறேன்
நான்

ஒரே பார்வையில்
எரித்து விடுகிறாய்
நீ

ஆயிரம் முறை ஒத்திகைக்கு
பிறகு சொல்கிறேன்
நான்

மறந்தும் கூட யோசிக்காமல்
மறுத்து விடுகிறாய்
நீ

இரவு பகலாய் கோயில்
வாசலில் குடியிருக்கிறேன்
நான்

பார்க்காமலேயே பணம்
போட்டுவிட்டு போகிறாய்
நீ

யுகம் யுகமாய்
உன்னோடு இருக்கிறேன்
நான்

ஒரு நிமிடம் கூட
ஒட்டாமல் இருக்கிறாய்
நீ

நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை

உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை

பி.கு: இதை படித்த பிறகும் உயிரோடு இருப்பவர்கள் comment போட்டுவிட்டு செல்லுங்கள்.

யாருப்பா அது. பட்டம் மேல எல்லாம் எனக்கு ஆசையில்லை. என்னது கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணியா. போதும் போதும் இத்தோட நிறுத்திக்குவோம்.

okie...okie...நீங்க எல்லாம் ஒன்னு கூடி எனக்கு வீடு கட்றதுகுள்ள me escape :)

Sunday, January 07, 2007

காதல் collage

கவிதையாய்
வாழ முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
------------------------------------------------------------------------------
காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது
------------------------------------------------------------------------------
எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்
------------------------------------------------------------------------------
காதல் என்றால் என்ன?
நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்.
------------------------------------------------------------------------------

P.S: இதையெல்லாம் நான் எழுதி இருக்கமாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வேலையில்லாத யாரோ எழுதினத வேலையில்லாததுனால சுட்டு blog-ல போட்டது தான் என்னோட வேலை.

Wednesday, January 03, 2007

புலி பார்த்து பூனை...

"கலி முத்தி போயிடிச்சி ஆண்டவான்னு யோசிக்கிட்டே 'congrats-da bharani ambi'. "
"thanksங்கண்ணா. எல்லாம் நீங்க கொடுத்த inspirationதான். "
"என்னது நான் கொடுத்த inspirationஆ. என்னடா சொல்ற? "
ஆமாங்கண்ணா. Priyaல இருந்து எல்லாரும் உங்களை குழந்தை குழந்தைன்னு கூப்படறாங்களா. ஒரு பெரியவரை எல்லாரும் குழந்தைன்னு கூப்படுறதுனால அவருக்குள்ள ஏற்படுற ரசாயன மாற்றத்தை base பண்ணி தான்ணே இந்த கதையே எழுதினேன்.
"போடா.... உனக்கு என் மேல பொறாமை"

"நான் இடம் மாற்றம், பணி மாற்றம்ன்னு கொஞ்சம் busyஆ இருந்துட்டேன். actually நான் எழுதின செய்யுள் எல்லாம் collect பண்ணி அருணின் அட்டகாசங்கள்ன்னு ஒரு தொகுப்பு போட போறேன். அப்ப பாருங்க நான் யாருன்னு"

bala, gopal, indianangel, marutham எல்லாரும் "busyயா இருக்கோம், இந்த மாதிரி மொக்க விஷயத்துக்கெல்லாம் நேர்ல வர முடியாதுன்னு" ஒரு mail மட்டும் தட்டிடாங்க.

"நாம எப்படி பழகி இருக்கோம். என்கிட்ட கதை எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லையே".
"சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க dreamzz அவர்களே. "
"இந்த பக்கமே தலை வச்சி படுத்து இருக்கமாட்டேன். என்னால இதெல்லாம் தாங்க முடியாதுடா சாமி. நான் உண்டு, என் கவித உண்டுன்னு இருக்கேன். என்னை அப்படியே வுட்டுங்கப்பா"

"Congrats bharani. I know you will do it."
"filbert என்ன வச்சி comedy கீமடி எதுவும் பண்ணலயே"

"hey bharani கலக்கிட்டீங்க. நான் கூட 25 post போட்டுடேன். எனக்கு இந்த idea தோனலியே. ok. அடுத்தது அப்ப கதைதான். அதுக்கு முன்னால, இதுக்கு ஒரு treat. "
"அதுக்கென்னா குடுத்துட்டா போச்சி. உங்களுக்கு இல்லாத treat-ஆ g3"
"என்னது treat. நீங்க குடுக்க போறீங்க. அதை நான் நம்பணும். இப்படி சொல்லி சொல்லியே இது வரைக்கும் 100 treat pending. மவனே ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ"

"அவன் அவன் பாகம் பாகமா கஷ்டப்பட்டு கதை எழுதிக்கிட்டு இருக்கான். அவனுக்கெல்லாம் விட்டிட்டு."
"என்ன சொல்லிறீங்க gils. ஒன்னும் புரியலையே"
"இரு நான் போயி முதல்ல பார்த்த ஞாபகம் இல்லையோவ முடிக்கிறேன். அப்ப புரியும்."

"அடப்பாவி மாப்ள, உன்னை நம்பி நிதியமைச்சரா போட்டதுக்கு, எவ்ளோடா லஞ்சம் குடுத்த? "
"என்ன மாம்ஸ், என்ன சொல்றீங்க? "
"அடப்பாவி, அரசு கஜானாவை சுத்தமா தொடச்சிட்டியேடா, அடுத்த வேளை ஆட்சி எப்படிடா நடத்துறது. இப்பவே பொதுகுழுவை கூட்றேன். மாப்பு வச்சிடியேடா ஆப்பு"

"நான் ஏற்கனவே dipika இந்தியாவ விட்டு போக போறான்னு துக்கத்தில இருக்கேன். இதுல இப்படி ஒரு news சொல்லி என்னை total upset பண்ணிட்டீங்களே. இந்த semester நெலமை ரொம்ப கவலையா இருக்கு கடவுளே - bsk ஏன் உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது"

"கலக்குற பரணி. இந்த கதை bird watching பத்திதானே. எனக்கு குடுப்பா. tips எதாச்சும் இருந்தா use பண்ணிக்கிறேன்."
"குருவே உங்களுக்கா. why torch for sun. இதுல உள்ளது எல்லாம் நீங்க குடுத்த tips தான்."
"அதான பார்த்தேன். kkவா கொக்கா. ஹா....ஹா.....ஹா"


"US வந்த உடனே current இல்லாம நானே shockல இருக்கேன். இதுல இன்னொரு shocking newsஆ. என்னால தாங்க முடியாதுடா சாமி. பொற்கொடி உனக்கு என்ன போதாத நேரமா, where is my ரங்கமனி, இந்த சின்னபொண்ண காப்பாதுங்க"

"what is this bharani. again you have written in tamil. நாலு line தமிழ்ல படிக்கவே ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல full book-a. OMG Prithz. மத்தவங்க எல்லாம் ரொம்ப புகழ்றத பார்த்தா, அவ்ளோ கஷ்டபட்டு இத அவசியம் படிக்கனுமா என்ன?"
"if you are not studing this book, you are missing something."

"hey bharani, வழக்கம் போல கலக்கிட்டீங்க. "
"என்ன இருந்தாலும் priya, உங்க கண்ணாளனே மாதிரி வராதுங்க. எல்லாம் அந்த inspiration தான். "
"நான் கூட கண்ணாளனே தான் final list-ல இருக்குன்னு கேள்வி பட்டேன். ஆனா அதுக்குள்ள ஏதோ orkuttu, சாரி உள்குத்து நடந்து இருக்கு. தலைவர் சொன்ன மாதிரி நீங்கதான் ஏதாச்சும் பண்ணுனீங்களோ. "
"நீங்க வேற, அசின் double act பண்றாங்கன்னு எல்லா பணத்தையும் தசாவதாரதுக்கு sponser பண்ண சொன்னதே தலைவர்தாங்க. இதெல்லாம் அரசரகசியம். பொது கூட்டத்தில பேசுவோம். அப்பொழுது உண்மைகள் வெளிவரும் என்பதை இந்த நேரத்திலே சொல்ல கடமை பட்டு
இருக்கிறேன். "
"எப்படியோ மாமாவும் மாப்ளயும் சேர்ந்து கண்ணாளனேவ காணாம பண்ணிட்டீங்க. நல்லா இருங்க. "

"ஹாய்டா, கலக்கிட்ட. கதை எல்லாம் எழுதற. எப்படிடா. "
"அது தெரியாமதான் நானே முழுச்சிகிட்டு இருக்கேன் ரம்யா."
இது கூடவா தெரியல. என்னோட friend ஆயிட்டல்ல அதான்.
"அப்ப நீயும் என்ன மாதிரி super-அ கதை எழுதுவியா. "
"ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி"

SKM மேடம் அப்படியே எட்டி பார்க்கறாங்க. "இந்த பய மட்டும் அடங்கவே மாட்டேங்கறானே. நாட்ல யார் யாரயோ encounter-ல போடுறாங்க. இவன் blog எழுதறேன்ற பேர்ல எல்லாரையும் கொல்றானே அதுக்கெல்லாம் encounter இல்லாயா"ன்னு யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.

திடீர்ன்னு ஒரு trunk call...

"வாழ்த்துக்கள் நண்பா. யார் என்ன சொன்னலும் நான் இருக்கேன் உன்னோட supportக்கு. நீ கலக்கு.
"thanks sasi. இப்பதான் கொஞ்சம் தையிரியமா இருக்கு. இந்த நேரத்தில நீ பழநில இருக்கியே. "
"இதோ இப்ப கிளம்பி வரேன். "

"சாகித்ய அகாதெமிய என்ன சைதாப்பேட்டை figures-ஆ நடத்தறாங்க. "
"ஏன் நாட்டாமை இப்படி ஒரு சந்தேகம். "
"இல்ல உனக்கு எல்லாம் குடுக்கறாங்களே அதான். PTI பசங்க nite அடிச்ச சரக்கு தெளியாம எதாச்சும் உளறியிருப்பாங்க. நீ இதையெல்லாம் பெருசா எடுக்காத. நாட்டாமை நான் இருக்கும் போது வேற யாருடா wrong தீர்ப்பு சொன்னது. தோ வரேன். "

"டமால்"ன்னு ஒரு சத்தம். திடீர்ன்னு கண் முழிச்சி பேய் முழி முழிக்கிறான் பரணி. பார்த்தா

"என்ன பரணி, தமிழ் வகுப்புல அதுவும் என்னோட வகுப்புலயே தூங்கறியா. படவா. "
"இல்லீங்க வேதா மேடம். ஒரு சூப்பர் கனவு."
"வகுப்புல தூங்கறதே தப்பு. இதுல கனவு வேறயா. என்னப்பா அது. "
"நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. "
"அடப்பாவி.
நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."

பி.கு: இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் கற்பனை அல்ல. ஆனால் அவர்களின் கருத்துகள் எல்லாம் சுத்தமான 100% அக்மார்க் கற்பனை. ஹி....ஹி....ஹி

Monday, January 01, 2007

Happy New Year

என் இனிய blog மக்களே,

Wishing you all a Very Happy & Prosperous New Year.

புது வருஷம். புது pickupகள், புது dropகள், புது getupகள், புது setupகள், புது நண்பர்கள், புது எதிரிகள், புது வரவுகள், புது செலவுகள் எல்லாம் உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டதாகவும், உங்கள் budgetக்கு உட்பட்டதாகவும் இருக்க என்னோட வாழ்த்துக்கள்.

singleஆ இருக்கறவங்க mingleஆக பாருங்க. team memberஆ இருக்கறவங்க project leadஆக பாருங்க. leadஆ இருக்கறவங்க CEO ஆக பாருங்க. இந்த companyல இருக்கறவங்க அந்த company போக பாருங்க. அந்த நாட்டுல இருக்கறவங்க இந்த நாட்டுக்கு போக பாருங்க. வேலை இல்லாம வெட்டியா இருக்கறவங்க நல்ல பணக்கார மாமனாரா பாருங்க.

நம்ம தலைவர் சொன்ன மாதிரி கணவு காணுங்க. கணவுல என்ன சின்ன கணவு, பெரிய கணவு.

உங்களுடைய ஆசைகள், கணவுகள், விருப்பங்கள், வேண்டுதல்கள் அனைத்தையும் இன்றே, இப்பொழுதே நிறைவேற்றிட அந்த ஆண்டவனுக்கு ஒரு urgent amendment போடுகிறேன்.

பவ்யமுடன், (பாவனாவுடன்னு தப்பு தப்பா படிக்க கூடாது)
பரணி

பி.கு: இது ஒரு post dated post. So Jan 1st அன்றுதான் அமலுக்கு வரும் :)