Thursday, November 30, 2006

பாட்டு மச்சி பாட்டு

Another superb song (Poo poovaai from bala) from Yuvan. This song is not as much popular as other songs(en kannai thirudikol penne, theendi theendi) in this movie, but extremely superb melody. As usual excellent singing by Unnimenon, supported by some fantastic lyrics.

கேட்டு ரசிக்க
http://www.musicplug.in/songs.php?movieid=817

படித்து ரசிக்க

பல்லவி

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புதுக்கவிதை

தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கைக்குழந்தை

புல்வெளியினில் நீ போனால்
வெண் பனித்துளி கால் கீறும்

நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஓர் துடிப்பே

சரணம் 1

எங்கள் இல்லத்திலே இவள் நாடகம்தான்
இங்கு தேவையில்லை தொலைக்காட்சி


எங்கள் உள்ளத்திலே தினம் பூமழைதான்
நாங்கள் செல்லவதில்லை மலர்க்காட்சி

மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க

வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அதட்டும் இனிமை ரசிக்க


கால் கொண்ட ரோஜா
துள்ளி துள்ளி வந்து
தூனுக்கு பின்னால் நின்று
சிரிக்கிறதே

[பூ பூவாய்..]

சரணம் 2

தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே
யார் போர்வை என்று அடம் பிடித்தோம்

மொட்டை மாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வைத்து உயிர் ருசித்தோம்

ஒரே ஒரே மின்விசிறி
அதன் அடியில் தூங்கி கிடப்போம்

இன்னும் இன்னும் தந்தை தோளில்
சிறு குழந்தையாக இருப்போம்

பூமியில் சொர்க்கம்
உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது
எங்கள் இல்லமே


[பூ பூவாய்..]

Tuesday, November 28, 2006

அடுத்தது என்ன

அடுத்தது என்ன-னு யோசிக்க தேவையில்லாம Tag எழுத சொன்ன தோழி பிரியா அவர்களுக்கு thanks சொல்லிக்கொண்டு.......start music....

பிடிச்ச வாசனைகள் மூணு...

1. புதுசா ஒரு book வாங்கி பிரிச்சி முகரும் போது வரும் paper வாசனை. (கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்)

2. biscuit factory-ya cross பண்றப்ப வரும் வாசனை. (எந்த biscuit-லயும் அந்த வாசனை வருவதேயில்லையே ஏன்)

3. Eucalyptus மரத்தில இருந்து வரும் வாசனை

பிடிக்காத வாசனைகள் மூணு...

1. சிகரெட்

2. அதை பற்ற வக்க கொளுத்தும் தீக்குச்சி

3. பற்ற வைப்பவர் பேசும் போது வரும் கப்பு

பார்த்த(பார்த்து கொண்டிருக்கும்) வேலைகள் மூணு...

1. site அடிப்பது

2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)

3. முதல் இரண்டும் செய்தது போக நேரம் இருந்தால் வாங்குற சம்பளத்துக்கு office computer-ஐ முறைப்பது

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூணு...

1. இதயத்தை திருடாதே (பயங்கர normal movie....but i love to see it again and again)

2. காதல் கவிதை (காதல் கோட்டை மாதிரி ஒரு மொக்க படத்த எடுத்த அகத்தியனோட கொஞ்சம் super படம்)

3. All feel good movies

மறக்க முடியாத நினைவுகள் மூணு...

மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்.(எப்படிடா பரணி உன்னால மட்டும்......)

பார்க்க விரும்பும் வேலை மூணு...

ஊரு பக்கம் போயி விவசாயம் பார்க்கனும்....அதான் நான் பார்க்க விரும்பும் ஒரே வேலை

செய்ய விரும்பும் செயல்கள் மூணு...

1. daily ஒரு friend வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வரனும்

2. எதை பற்றியும் யோசிக்காமல் தூங்கனும்

3. office போகாம வீட்ல இருந்தே work பண்ணனும்

சாப்பிட விரும்பும் உணவு மூணு...

பாசமா யாராச்சும் சமைத்து போட்டா மூணு என்ன முன்னூறு உணவு சாப்பிடுவான் பரணி

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூணு...

1. சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் ஒரு நாளாவது இருக்கனும்

2. சந்தோஷமா இருக்கும் போது நிறைய பேர் இருக்கும் இடம்

3. சோகமா இருக்கும் போது தனியா இருக்கும் இடம்

என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூணு...

தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்.

P.S: இத இன்னும் மூணு பேருக்கு tag பண்ணி வாங்கி கட்டிக்க எனக்கு விருப்பமில்லை. So Ensaaaay மக்களே !!!!

Monday, November 20, 2006

blog-ல் மரம் வளர்க்கும் திட்டம்

ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி அப்படின்னு சொன்ன காலம் போயி, எங்கப்பன் blog-ல மரம் வளர்த்தான்னு என் பொண்ணோ, பையனோ சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வேதா அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தை யார் ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. ஆனா ஆரம்பிச்சவங்க உயிரோட இருந்து இதை படிச்சாங்கன்ன கண்டிப்பா தூக்கு மாட்டிப்பாங்க. என்ன பன்றது, விதி வலியது.

இதுக்கு rules எல்லாம் இருக்காம். நாம boys. so break the rules. To read the rules click here

//வேதா எழுதினதுக்கு முன்னாடி.....

The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either."Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard... //

இது வேதா அவங்க எழுதினது (இந்த பதிவோட ஒரே உருப்படியான விஷயம்)


மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இனி நாம எழுதவது (கதை எழுதுவதை காதலிப்பவர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது, ஏன்னா இந்த கதை(???) அவங்க ஜீரனத்துக்கு ஆகாது)

சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவின தொலைப்பேசி, கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரின் தலையில் "நச்" என்று அடித்தது.

எரிச்சலுடன் கண்விழித்த சுந்தர், தொலைப்பேசியை எடுத்து, "telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான்.

திகிலில் இருந்த சூர்யா, "டேய் phone-ல மீரா-டா" என்றான்.

"யாரு மீரா ஜாஸ்மினா, அவங்களுக்கும் s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல."

"டேய் அந்த மீரா இல்லடா"

"பின்ன, P.C Sriram-வோட மீராவா"

"என்ன கொலைக்காரன் ஆக்காத. என் கதையில வராளே அந்த மீரா"

"சர்தான். நேத்து nite-ஏ சொன்னேன் உன்கிட்ட, raw-வா அடிக்காத, உனக்கு தாங்காதுன்னு. இப்ப பாரு இன்னும் தெளியல".

"சனியனே, நான் தெளிவா தாண்டா இருக்கேன். line-ல இருக்கா நீயே பேசு".

சுந்தர் receiver-அ வாங்கி mouthpiece-ஐ காதுல கொடுத்து "அலோ" என்றான் வடிவேலு style-ல்.

டென்ஷனான சூர்யா, "நீ தெளிவா receiver-அ புடி" என்று மாற்றிக்கொடுத்தான்.

சுந்தர் மீண்டும் "அலோ" என்றான்.அந்த பக்கம் இருந்து சத்தம் ஏதும் இல்லை.

ஓரு பாடல் மட்டும் மெல்ல கசிந்து வந்தது.

"ரா ரா....."

P.S: யப்பா சாமி, டங்கு டணால் ஆகிபோச்சி.

இத இப்படியே விட மனசில்லை. அதனால நம்ம சென்னை தோஸ்துகள் சசி (certifiation எல்லாம் முடிச்சிட்டு வந்து ஜாலியா எழுதுங்க) , g3 (ஹி..ஹி...office-ல இருக்கும் போது எழுதுங்க) , பொற்கொடி(நீங்க பயங்கர busy-ன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சாச்சும் எழுதுங்க) மூனு பேரும் தொடர்ந்து வளர்ப்பாங்க.

Thursday, November 16, 2006

சில உளறல்களும் சில புலம்பல்களும்

நொடி நேர வானவில்லிற்கெல்லாம்
நேரம் ஒதுக்குவதில்லை
நான் நிலா ரசிகன்

நீ
என் இரவின் கனவில்
வந்த பகலில்
கண்ட கனவு

உன்னை
எப்பொழுதும் முதன்முதலாய்
பார்த்து கொண்டிருக்கிறேன்

வருகிறாய் தான்
என் சிறகை நனைக்க
மழையாகவும்
என் கூட்டை கலைக்க
புயலாகவும்

வேண்டும் வேண்டாம்
என்பதில்
முடிகிறது வாழ்க்கை

Courtesy: Vikatan

P.S: "ஏண்டா டேய், உனக்கு சொந்தமாவே எழுத தெரியாதா. எப்ப பாரு அங்க படிச்சது, இங்க கேட்டது, அவங்க பாடினது, இவங்க எழுதினதுன்னு சொல்லிறியே தவிர நீ எதாச்சும் சொந்தமா எழுதினியான்னு" நீங்க பாசமா கேட்கறது எனக்கு கேட்குது.

ஆனா என்ன பன்ன....முடியல...முடியல....எவ்ளோ நாள் தான் நானும் எழுத தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது....

உங்க கதை, கவிதைகளை படித்து ரசிப்பதோடும், உங்க வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை படித்து அதனோடு என்னோட வாழ்க்கையை இனைத்து பார்த்து கொள்வதோடும், உங்க லொல்லையும் ரவுசையும் படித்து சிரிப்பதோடும், உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும், உங்க சமூக கோபங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதோடும், உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் ஒரு 'ஓ' போடுவதோடும் முடிந்து விடுகிறது இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்.

இதற்கு மேல் நான் ஏதாவது செய்தால் அது கண்டிப்பாக ஒரு உலக சாதனைக்கான முயற்சிதான்.

Tuesday, November 14, 2006

Happy Birthday

திடீர்ன்னு ஆஜராகி என் மானத்தை கப்பலேத்துவதற்காகவே comment போடுகிற தோழி திவ்யாவிற்கு இன்று பிறந்தநாள்.

Helping tendency, standing by friends in their tough time marks her attitude. US-la இருக்கும் போது அப்ப அப்ப நல்ல சாப்பாடு எடுத்துத்து வந்து கொடுத்து புண்ணியம் தேடிக்கிட்டவங்க.

Divyah, Wishing you a very very Happy Birthday(நீங்க ஆசைபடுற மாதிரியே ஒரு நல்ல பையன் உங்களுக்கு வாக்கப்பட என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்).

மக்களே நீங்களும் வாழ்த்திட்டு போங்க.

Sunday, November 12, 2006

சென்னையில் ஒரு 'பயங்கர' மழைக்காலம்






கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடிச்சோம்
சென்னை-ன்னு ஒரு தீவு


Pictures Courtesy: The Hindu
Hykoo Courtesy: Raasathesingu

Friday, November 10, 2006

50 hours extended travel = Eiffel Tower dharisanam

This is what happened.

My flight from Atlanta to Paris got delayed. So i missed the connecting flight from Paris to Chennai. They gave me ticket for Paris to Mumbai on the next day flight. France transit visa was rejected by french police, first time. So airport-laye thevudu kaathen. Then at the end of the day, we asked for visa again and it got approved (Oru friend kaikuzhandayoda irundhaanga...avanga punniyam). Went to hotel at around 6. Enquired about Eiffel tower. Oru 40 minutes agaunu sonnaga. Udane pudi cab. Vaazhkayila idhai parka ellam namba kasu selavupanniya poga porom. Never.

Appa sutta padangalil konjam...

Naan ponenu neenga nambanum illa :)

Namma Eiffel

Avar kattina tower...avar-na avar mattum illenga....niraya per serndhudhaan katinaanga :)

P.S: Vaazhga delta airlines-oda service. Ippadi flight ellam delay panradhula evlo nalladhu nadakuthu...

Thursday, November 09, 2006

Bharani's Fact Book

நம்
தமிழ் பெண்கள் வைக்கும்
ஒற்றை விபூதி தீற்றலின்
அழகிற்கு
ஈடில்லையாம்
ஆயிரம் அமெரிக்க பெண்களின்
அழகு

P.S: Onnung Keezha onnu irukarathunaala idhai pudhu kavidhai-nu neenga nenacha aduku naan porupileengo. Its a straight forward jo...che fact :)

Wednesday, November 08, 2006

Vandhutaanya Vandhutaan

Idly
Ketti Chutney
Kumudam
Vikatan
Saidapettai
Chidambaram
Radio Mirchi...Idhu sema hot-u machi...
Nayar, oru 1/2 special...
2.50 silrai irundha vandiyila yeru...
Auto...auto....
Meteruku mela 10 rooba agumba....
Dei kasumaalam, uttanda sollitu vanthutiya....

Sorgam