Wednesday, February 28, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை - தொடர்ச்சி

*** நம் துணை முதல்வர் தொடரும் உளறுதல் என் உள்ளத்தின் வேலை(தொடர்ச்சி) படிக்க கிளிக்கவும் ***


இரும்பில் இதயம்
எனக்கு
காந்த விழிகள்
உனக்கு

கண்ணன் வாயில்
உலகம் பார்த்த யசோதைக்கு
தெரியாது
உன் கண்ணை பார்த்தால்
கண்ணனே தெரிவான்
என்று

உன்னை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்
என்றில்லை எனக்கு
உன் பார்வை படும்
இடத்தில் இருக்க வேண்டும்
அவ்வளவு தான்

உன்
eye pass
செய்ததால் வந்த
heart attackற்கு
இப்பொழுது
bypass
செய்கிறார்கள்

விழும் பொழுதெல்லாம்
எழ வேண்டும் என்றவனுக்கு
விவரம் தெரியாது
உன் விழிகளில்
விழுந்தால் எழவே
முடியாதென்பது

நாம் சதுரங்கம் ஆடுகையில்
மட்டும்
என் சேனைகள் எல்லாம்
எனக்கெதிரே

நீ பல்லாங்குழி
ஆடுகையில்
பள்ளங்கள் என்
உள்ளத்தில்

நடந்ததை எல்லாம்
நண்பனிடம் கூறினால்
'எல்லாம் விதி' என்கிறான்

இப்பொழுது புரிந்ததடி
விதி என்பது
உன்
விழியின் இன்னொரு
பெயர்!

P.S: நான்காவது. மிச்சம் மீதி இருப்பவர்கள் comment போட்டுட்டு போங்க. மாம்ஸ், உங்க தலைப்பை உங்கள் அனுமதி இல்லாமல் சுட்டுட்டேன். excuse for that. அப்பால நான் உத்தரவு வாங்கிக்கறேன் :)


Update: இந்த relay கவிதையை (???) நம் கட்சியின் கொ.ப.செயும், துணை முதல்வருமான வேதா அவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன் (கரகோஷம்...)அமைதி, அமைதி. அடுத்து நம் கட்சியின் சிங்கங்கள் அனைவரும் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்..... ஹி...ஹி....

Sunday, February 25, 2007

மொழி


வாழ்வின் அழகை, அதன் positivityயை, அதில் இழையோடும் மென்சோகத்தை,அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய நகைச்சுவையை அப்படியே சொல்லும் தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி நம் மனசோடு பேசும் படம் தான் மொழி. Hats Off to RadhaMohan and Prakashraj.

இந்த post படத்துக்கான review அல்ல. உங்களை பார்க்க தூண்டும் ஒரு முயற்சி :)

Jo is deaf and dumb.
பிரகாஷ்ராஜ்: அர்ச்சனா, இசைன்னா உனக்கு என்ன?
ஜோ சைகை பாஷையில் சொல்றாங்க. ஸ்வர்னமால்யா அதை வார்த்தையில சொல்றாங்க....
ஜோ: இசைங்கறது எனக்கு ஒரு மொழி மாதிரி. எனக்கு ஹிந்தி தெரியாது. சைனீஸ் தெரியாது. அது மாதிரி இசையும் தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச மொழி ஒன்னு உங்க யாருக்குமே தெரியாது.
எல்லாரும் ஜோவையே அது என்னன்னு பார்க்க....
ஜோ: அது மௌனம்

ஜோ, பிருத்திராஜோட காதலை accept பண்ணிக்கவே மாட்றாங்க. She has her own insecurity. climaxக்கு முன்னாடி ஒரு scene.

பிருத்திவிராஜ்: வாழ்க்கையில சில விஷயங்களை கேள்வி கேட்காம நம்பித்தான் ஆகனும். நாம பண்ற தப்ப உணர்ந்து திருத்திக்கலன்னா, பின்னாடி அத சரி செய்யறதுக்கான ஒரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே போயிடலாம்.

இசை எப்படி இருக்குன்னு ஜோ கேட்க, பிருத்திவிராஜ் அவங்க கையை speakerல வச்சி explain பண்ற மாதிரி ஒரு பயங்கர emotional scene வரும். THE ultimate scene of the movie.

தமிழ் சினிமா உயிரோடு இருப்பதற்கு மொழி மாதிரி படங்கள் தான் காரணம்.இந்த மாதிரி படங்கள் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காகவாவது எல்லோரும் பார்க்கனும்.

மொழி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தை விரும்பாதவர்கள் மட்டமான தமிழ் சினிமாவிற்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

Friday, February 23, 2007

கேட்கலாம், படிக்கலாம் (exam எல்லாம் கிடையாது)

விரும்புகிறேன் படத்தில் வரும் ஒரு அழகான பாடல் இது. தேவா எங்க இருந்து காப்பி அடிச்சாரோ, ஆனா சூப்பரா அடிச்சி இருப்பார். வழக்கம் போல் வைரமுத்து அசத்த, உன்னிமேனன் குரலில்...

கேட்டு ரசிக்க

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5610/

1. மேலே உள்ள லின்கை கிளிக்கவும்.
2. விரியும் பக்கத்தில் "துடுக் துடுக்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் லின்கை மீண்டும் கிளிக்கவும் .

படித்து ரசிக்க

[பல்லவிக்கு முன்] (பல் வலிக்கு முன் இல்லீங்கோ)

கடைக்கண் பார்வைதனை கண்ணியர்தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்
(இந்த portion மட்டும் பாவேந்தருடையது)

[பல்லவி]

ஒத்த பார்வை பார்த்தா
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா

பார்வை பட்ட இடத்தில்
புதுசா ரத்தம் ஊறுதாத்தா


முன்னால வந்தாயே
தன்னால ஜெயிச்சிபுட்டேன்

மின்னலாய் போனாயே
இதயத்தை தொலச்சிபுட்டேன்

[சரணம் 1]

வா வா என்று நான் கேட்ட போதும்
வந்தேன் என்று நீ தாவவில்லை

வானம் தாண்ட சிறகுள்ள போதும்
நானம் தாண்டி வெளியேரவில்லை


ஆகையினால் அடி
விரும்புகிறேன்

அரும்பு மலரும் வசந்த காலம்
ஆசை மலரும் கார் காலம்

அன்பு மலரும் ஆறு காலம்
ஒரு கண்ணில் இரு கண்ணில்

உலவ கண்டதால்
விரும்புகிறேன்

[முன்னால வந்தாயே...]

[சரண்ம் 2]

அசர வைக்கும் உயரமும் நீ இல்லை
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை
வசதிப்பட்ட உசரம்

என்பதனால் அடி ரதியே
விரும்புகிறேன்

கிளைகள் வேறு இருவருக்கும்
கூடுகள் வேறு இருவருக்கும்
பறக்கும் திசைமட்டும்

ஒன்றாய் இருப்பதானாலே
விரும்புகிறேன்


[முன்னால வந்தாயே...]

[சரணம் 3]

பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே
காதல் வருமென்று நினைத்ததில்லையே
உன்னை கண்டதும்

என் கருத்து மாறியதால்
விரும்புகிறேன்

[ஒத்த பார்வை...]

பி.கு: வர வர ரொம்ப வறட்சியா போச்சி...அய்யயோ...projectல பொண்ணுங்க இல்லாதத சொல்லலிங்கோ...post போட matter எதுவும் கெடைக்காதத சொன்னேன்.....நீங்க அடிக்க வரதுக்குள்ள escappppuuuu :)

Thursday, February 15, 2007

Fw: Indian Grasshoppers

OLD VERSION

The ant works hard in the withering heat all summer long building his house and laying up supplies for the winter. The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away. Come winter,the ant is warm and well fed. The grasshopper has no food or shelter so he dies out in the cold.

MODERN VERSION

The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies forthe winter. The grasshopper thinks the ant's a fooland laughs & dances & plays the summer away. Come winter, the shivering grasshopper calls a press conference and demands to know why the ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering grasshopper next to a video of the ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the ant's house.

Megha Patkar goes on a fast along with other grasshoppers demanding that grasshoppers be relocated to warmer climates during winter.

Amnesty International and Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance).

Opposition MP's stage a walkout.

Left parties call for "Bharat Bandh" in West Bengal and Kerala demanding a Judicial inquiry.

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among ants and grasshoppers.

Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the Prevention of Terrorism against Grasshoppers Act [POTAGA]", with effect from the beginning of the winter.

Arjun Singh makes Special Reservation for Grasshopper in educational Institutions & in Govt Services.

The ant is fined for failing to comply with POTAGA and, having nothing left to pay his retroactive taxes,his home is confiscated by the Government and handedover to the grasshopper in a ceremony covered by NDTV.

Arundhati Roy calls it "a triumph of justice".

Lalu calls it 'Socialistic Justice'.

CPM calls it the 'revolutionary resurgence of thedowntrodden'

Koffi Annan invites the grasshopper to address the UN General Assembly.

Many years later...

The ant has since migrated to the US and set up a multi billion dollar company in silicon valley.

100s of grasshoppers still die of starvation despite reservation somewhere in India...

As a result of loosing a lot of hard working ants and feeding the grasshoppers, India is still a developing country...


Courtesy: Forward mail from a friend

Feb 14 - End Of The Day

Over hype குடுத்து ஓடாத தமிழ் படம் மாதிரியே முடிந்தது இன்றைய தினம். Period.

Wednesday, February 14, 2007

Feb 14 - Start Of The Day

காதலிப்பதும் காதலிக்கப்படுவதையும் விட அழகிய நிகழ்வுகள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை பராபரமே.

ஆதலினால் காதல் செய்வீர் !

Friday, February 09, 2007

விழியில் விழுந்து

ஊமை மனம்
ஊசியேற்றியது பார்வை
உன் கண்கள் தான்
முதலில் சொல்லியது

பேசியது உன் தோழியிடம்
கேட்டது நீ
ஒட்டுக்கேட்ட காதுகள்
அடுத்து

அறிமுகம்
குலுக்கிய கைகள்
காட்டிக்கொடுத்தன

கொலுசின் சிணுங்கல்
முதல்நாள் என் செல்போன்
ஒலிக்கும் போதெல்லாம்
மறுநாள் நீ
நடக்கும் போதெல்லாம்

இல்லாத போது
இருக்கை பார்க்கும்
வராத நாட்களில்
வாசல் பார்க்கும்

உன் உள்ளம் கூட
சொல்லிவிட்டதடி
உன் உதடுகளுக்கு
எப்பொழுது திறப்புவிழா

காதல் வந்தால்
கணுக்கால் நகம் கூட
காட்டிக்கொடுக்குமா என்ன

வள்ளுவன்
இப்படித்தான் சொல்லியிருக்க
வேண்டும்

காதலுக்கும் உண்டோ
அடைக்குந்தாழ் !

P.S: மூன்றாவது. முதல் இரண்டில் தப்பித்தவர்கள் இதை படித்து mental ஆகக்கடவது.

Thursday, February 08, 2007

இதுக்கு என்ன title வைக்கிறது

"shall i teach you
shall i teach you
come gentle come close

shall i scoop and give
shall i scoop and give
beauty wont exhausted when scooped"

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வரிகள் are english subtitles for the song "sollitharava" from "Majaa" in ayngaran DVD.

பூமாதேவி வாய திறக்கப்போற நேரம் நெருங்கிடுச்சோ???

Wednesday, February 07, 2007

பாட்டு மச்சி பாட்டு

Another superb song of this season. Movie: pori. A simple tune by Dhina, powered by an amazing lyric of Yugabharathi. Madhu balakrishnan's voice adds to the class. மிஸ் பண்ணாம கேளுங்க.


கேட்டு ரசிக்க

பேருந்தில் நீ

படித்து ரசிக்க

[பல்லவி]

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

[சரணம் 1]

பயணித்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே


தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ....தானே


[பேருந்தில் நீ....]

[சரணம் 2]

தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு


தேய்பிறை போல்தொடும் நகக் கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே


பிடித்ததும் தருகிற பரிசு பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே


[பேருந்தில் நீ....]

Tuesday, February 06, 2007

புதிய பாதை

Intro

என்னடா இது நம்ம blogல நிறைய post கத்திரிக்காய் பத்தியே இருக்கேன்னு எனக்கு ஒரு வருத்தம் இருக்கறதுனாலயும், நீங்களும் அதை கேட்க நினைத்து கேட்காமல் போனது எனக்கு கேட்டதுனாலயும் இந்த வாரம் நாட்டு நடப்பு. அதுவும் முல்லை பெரியார் விவகாரம் பத்தி பார்ப்போம்.

Background

மணிரத்னத்தோட அடுத்த படம் முல்லை பெரியார் base பண்ணின்னு கேள்விப்பட்டு அவர்கிட்ட assistanta சேரலாம்ன்னு போனேன். படத்துல வைக்கிற மாதிரி ஒரு scene சொல்லு பார்க்கலாம்ன்னு சொன்னார்.

சொல்றேன் சார். சொல்றேன். silver jubilee scene ஒன்னு சொல்றேன்.

Scene

சாருஹாசன் வீட்ல மாப்பிள்ளை கேட்டு மம்முட்டியும், கீதாவும் போறாங்க. அப்ப

சாரு: "முல்லைங்கறது யாரு. என்ன குலம். என்ன கோத்திரம். அவளுக்கு எதுக்கு என் புள்ளையாண்டான் பெரியார குடுக்கனும்".

மம்மு: "தெருவுல முழம் அஞ்சு ரூவான்னு விப்பாங்களே தெரியாது அதான் முல்லை. யோவ் நீ இன்னும் 'தளபதி'ய விட்டு வரலயா. தலைவர் இப்ப 'சிவாஜி'ல இருக்காரு. கொஞ்சம் வூட்ட வுட்டு வெளிய வா".

கீதா: "முல்லை எங்களோட ஒரே bunன்னு, சே, பொண்ணு"

சாரு: "உங்க பொண்ணுக்கு என்ன தகுதி இருக்கு. salman, vivek oberaiன்னு சுத்திட்டு இப்ப என் பையனை கட்டிப்பேன்னா எப்படி நம்பறது".

மம்மு: "ஆமாம் உன் பையன் மட்டும், karishma, raniன்னு சுத்திட்டுதான எம் பொண்ணுகூட சுத்தினான். உம் பையனை கட்டிகிறதே ஒரு பெரிய தோஷம். இதுல எம் பொண்ணுக்கு தோஷம்ன்னு கோயில் கோயிலா கூட்டிட்டு போயி கொல்றான். முடிவா என்ன சொல்ற?"

சாரு: "நான் உயிரோட இருக்கற வரைக்கும் இது நடக்காது."

மம்மு: "அப்ப இன்னைக்கு உன்னை முடிக்கிறேன். நாளைக்கு கல்யானத்த முடிக்கிறேன்."

மம்முட்டி துண்டை தூக்கி போட, AR Rahman music-la "முல்லை....பெரியார்....முல்லை....பெரியார்"...பயங்கர sound-oda ஒரு background score பண்றோம்.

Conclusion

நான்: "எப்படி சார் scene."

மணி: "டேய் முல்லை பெரியார்ன்னா என்னனு தெரியுமா உனக்கு".

நான்: "நம்ம hero, heroine பேரு தானே. கொஞ்சம் old nameஆ இருக்கே சார். அபிஷேக்குக்கும், ஐஸுக்கும் suit ஆகுமா சார்".

மணி: "அடப்பாவி அடப்பாவி. court, case, வக்கீல், வாய்தான்னு அரசாங்கமே அல்லோட படுது. 10 assistants வச்சி அதை எல்லாம் daily படிச்சி, 10 கோடி budgetல படம் plan பண்ணினா, simple-a hero, heroineக்கு பேர்ன்னு சொல்லிட்டியேடா. "

"Security, இவன தூக்கி வெளியபோடுங்க".

நான்: "சார், சார்...நான் அப்பவே சொன்னேன் சார். இது எல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு. இவங்கதான் எழுது எழுதுன்னு உசுப்பேத்தி விட்டாங்க சார்."

"சார்...சார்....சா.....door lock"

Thursday, February 01, 2007

காலை எழுந்தவுடன் காதல்

பூக்கள் அற்ற
ஒரு தேசத்தில்
உன் பாதச் சுவடுகளை
இறைத்துவிட்டு வா
பசி தீர்த்துக்கொள்ளட்டும்
பட்டாம்பூச்சிகள்



நடை வண்டியென
உன்
கண்களைப் பிடித்தபடி
கற்றுக்கொள்கிறேன்
காதலை



நீ
பிடித்து வரும்
குடையில்
ஒரு குழந்தையென
சறுக்கி விளையாடுகிறது
மழை


ரொம்ப நாள் கழிச்சி எல்லாரோட blog பக்கம் போய் நம்ம மாம்ஸ், dreamzz, பொற்கொடி எல்லாரும் காதலை பத்தி கலந்து கட்டி எழுதினத படிச்சிட்டு, இந்த வாரம் விகடன் book எடுத்தா அதுலயும் காதல் கவிதைகள். அப்பாடா நம்ம அடுத்த postக்கு matter readyன்னு அத சுட்டு மேல போட்டுட்டு FM போட்டா அதுல நம்ம வைரமுத்து SPB voiceல என்ன சொல்றார்னா

மருந்துகள் இல்லா
தேசத்தில் கூட
மைவிழி பார்வைகள்
போதும்

என்னடா இது ஒரே காதல் மயமா இருக்குன்னு தேதியா பார்த்தா Feb 1. நம்ம அல்வா dayக்கு இன்னும் 14 daysதான் இருக்கு.

மனசாட்சி: டேய், டேய் அடங்குடா. இன்னைக்குதான் தேதி 1. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா?

அதனால என்ன. தீவாளிக்கு ஒரு மாசம் முன்னாடியே புது dress எடுக்கறது இல்லயா. அது மாதிரிதான். இப்பவே ஆரம்பிச்சாதான் இந்த வருஷமாச்சும் நல்லது எதாவது நடக்கும்.

மனசாட்சி: நடக்கும் நடக்கும். நீ ஜொள்ளு வுடுறியே அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்கும். நீ அடுத்த வருஷமும் இதே மாதிரி postதான் போடனும்.

உனக்கு பொறாமை.

மனசாட்சி: ஆமாம் எனக்கு பொறாமை. இவனுக்கு கல் ஆமை. போயி பொழப்ப பாருடா

யார வேனா எமாத்திடலாம். ஆனா மனசாட்சிய மட்டும் முடியல (மனசாட்சி: cycle gapla அய்யா தத்துவம் சொல்லிட்டாரு. எல்லாரும் கேட்டுக்கங்க. தத்துவம் சொல்ற மூஞ்ச பாரு....!#$%^%&)

P.S: மக்களே, officeல் ஆணிகள் சற்று அதிகம் ஆகிவிட்டதால் கொஞ்சம் attendance irregulara இருக்கும். மன்னிச்சிக்கங்க. முடிஞ்ச வரை வந்து எல்லாரையும் பார்த்துட்டு போறேன்.

கவலை தோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும், கட்சி அலுவல்கள் பின்னால் அழைப்பதால் இத்தோட அப்பீட்டு :)

இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. ஒரு பாட்டு கேட்டுட்டு போங்க.

Era Nila