Tuesday, January 16, 2007

வானவில்லின் துண்டொன்று

நீ பிறந்தது
தேவலோகம் தான்

உன் பாதம் பட்ட
இடத்தில் தோன்றினார்கள்
தேவர்கள்
பிரம்மாவின் வேலை போனது

உன் உள்ளங்கை
உஷ்ணத்தில் உறங்கிவிட்டனர்
ஐயகோ திருமாலின் வேலை

உன் பார்வையில்
பற்றிக்கொண்டது
பார்த்தவரின் இதயங்கள்
சிவனின் வேலைக்கும் ஆபத்து

நீ பேசினாய்
வேதம் படிக்க ஆரம்பித்தனர்
சரஸ்வதி அச்சம் கொண்டாள்

சிரித்தாய்
செல்வங்கள் சேர்த்தனர்
கோபத்தில் கொதித்தாள் லட்சுமி

உன் சுண்டுவிரல்
தொட்டதில் வீரம் கொண்டனர்
பாவம் பார்வதி

எல்லா கடவுளுக்கும் வேலை போனது

பார்த்தார் பிரம்மன்

நாடு கடத்தபட்டாய்
பூலோகத்திற்கு

உலக தைரியமடி எனக்கு
உன்னை காதலிக்கிறேன்

நீ காதலிக்கிறாயா

பதில் சொல்லிவிடாதே

உன் உதட்டு அசைவில்
உறங்கிவிடும்

இத்தனை ஆண்டுகள்
உயிரோடிருக்கும் என்
இதயம்


பி.கு: முந்தின கவிதைக்கு(???) நீங்க கொடுத்த ஆதரவை நினைக்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனுன்னு நினைக்கும் போது உங்க கவலை தோய்ந்த முகங்கள் மனசில வந்து தடுக்குது. அதனால நிறுத்திக்கிறேன்.

யாருப்பா அது, தேங்கா மூடி தூக்கி போடுறது. நிறுத்திக்கிவோம். இத்தோட நிறுத்திக்கிவோம்.

Sunday, January 14, 2007

குடும்பத்திற்கு குண்டுவைப்போம்

வணக்கம் நேயர்களே. இது "உருப்படாத FM 111". நான் உங்க 'மொக்க' மோகன் and 'அறுவை' அருணா.

எற்கனவே மெகா சீரியல் பார்த்து சீரழிஞ்சி போகும் நம் தமிழ் மக்கள்ல, நல்லா இருக்கும் ஒன்னு ரெண்டு குடும்பத்துக்கும் குண்டுவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த 'குடும்பத்திற்கு குண்டுவைப்போம்'. வாங்க நேயர்களே நிகழ்ச்சிக்கு போவோம்.

திருமணமான தம்பதிங்க மட்டும் தான் இந்த நிகழ்ச்சிக்கு call பண்ணனும். உங்க கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் தான் call பண்ண வேண்டும். பக்கத்து வீட்டுக்காரன் மனைவி, எதிர்வீட்டு அம்மாவோட கணவன் கூட சேர்ந்து எல்லாம் phone பண்ணக்கூடாது. அதுக்கு 'இரவோடு இரவாக'ன்னு இன்னொரு நிகழ்ச்சி night 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதுக்கு phone பண்ணுங்க.

இன்றைய நிகழ்ச்சியோட situation சொல்றோம், கவனமா கேட்டுக்கோங்க. உங்க கணவரோட அம்மா ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. அவங்க நெகம் வெட்டும் போது அது light-ஆ விரல்ல பட்டு ரத்தம் வந்துடிச்சி. உடனே அது நீங்க செய்த சதிதான்னு அவங்க உங்க கணவன் கிட்ட போட்டு குடுத்துடாங்க.

இப்ப உங்க ரெண்டு பேருக்கும் நடக்கிற சண்டைய நீங்க தத்ரூபமா நடிச்சி காட்டனும். அப்படி சூப்பரா நடிக்கிற தம்பதிக்கு divorce வக்கீல் fees நாங்க கொடுப்போம்.


சரி first caller கிட்ட பேசுவோமா.

MM: ஹலோ, யார் பேசறீங்க?
(no sound)
AA: ஹல்ல்ல்லோ, யார் பேசறீங்க?
K(கணவன்): நீங்க சூப்பரா இருக்கீங்க மேடம். ரொம்ப நாளா try பண்றேன்.
AA: ஹ..ஹ..ஹ...அப்படியா, நான் ஏற்கனவே committed. உங்க பேர் என்ன?
K: என் பேர் அஜித் மேடம். உங்க voice சூப்பரா இருக்கு.
AA: ஹ..ஹ..ஹ...நான் பல் தேய்கறதே இல்ல. அதான்.
MM: சரி போட்டியை ஆரம்பிப்போமா?
(no sound)
AA: நிகல்ச்சிக்கு போலாமா அஜித்.
K: 'ஆழ்வார்' படத்துக்கு போலாம் மேடம்.
AA: ஹ..ஹ..ஹ...நீங்க ரொம்ப comedy-ஆ பேசறீங்க.
MM: உங்க மனைவி இருக்காங்களா, அஜித்.
K: இருக்கா இருக்கா. மேடம் நீங்களே பேசுங்க. இந்த ஆள் எதுக்கு நடுவுல மொக்க போடுறான்.
AA: உங்களுக்கு situation தெரியும்ல, ஆரம்பிங்க.

K: ஏண்டி, எங்க அம்மா ஊர்ல இருந்து வந்தா, அவங்க விரல வெட்டிடுவியா நீ.
M(மனைவி): யோவ். நான் எங்க வெட்டினேன். அவங்கதான் நெகம் வெட்டினாங்க. அதுல சும்மா ரவோண்டு கிழிச்சிடிச்சி.
K: அது எப்படிடி தானா வெட்டும். நீ எதாச்சும் பண்ணி இருப்பா.
M: ஆமாம். நான் பூரியும் மசாலாவும் பண்ணி இருக்கேன். வந்து கொட்டிக்க.
K: தாலி கட்டின புருஷன்கிட்டயே எதுத்து பேசறியா. (பொளேர்)
M: குடிகாரா. குடிகாரா, dailyகி உங்கூட இதே ரோதனையா போச்சி. உங்க ஆத்தா வெட்டிகிட்டதுக்கு நான் என்னய்யா பண்ணுவேன்.
K: என்னடி திரும்ப திரும்ப எதுத்து பேசற. வெளிய போடி. வீட்ட விட்டு வெளிய போடி....

MM: சரி நேயர்களே. இன்னொரு குடும்பத்துக்கு குண்டு வச்சாச்சி. அந்த சந்தோஷத்த கொண்டாட இதோ ஒரு super hit பாடல்.

(அம்மாடி ஆத்தாடி....)

p.s:
நான்: தாயே, இந்த மெகா சீரியல்ல இருந்தும், phone போட்டு பாட்டு dedicate பண்ணி மக்களை கொல்ற நிகழ்ச்சியில இருந்து காப்பாத்து தாயே.
கடவுள்: மகனே, நான் 'ராஜ ராஜேஸ்வரி'யிலயும், 'வேப்பிலைக்காரி'யிலயும் busy scheduleல இருக்கேன். 2010 வரைக்கும் no dates. வேனுன்னா இப்பதிக்கு உனக்கு புடிச்ச பாட்டு சொல்லு, dedicate பண்றேன். என்னால அவ்ளோ தான் முடியும். எல்லாம் என்னோட சக்திய மீறி போயிடிச்சி மகனே.
நான்: ?*&%*&^%()%$##%

Happy Pongal

கும்புடறேனுங்கோ,

எல்லாருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் (உனக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்ன்னு சொல்லி என்னை கலாய்க்க கூடாது, ஆமாம்).

பொங்கலுக்கு மத்தவங்களுக்கு வெண்பொங்கல் குடுங்க, சர்க்கரை பொங்கல் குடுங்க. ஆனா அல்வா குடுத்துடாதிங்க.

பொங்கல் எதிர்பார்த்து,
பரணி

Thursday, January 11, 2007

பாட்டு மச்சி பாட்டு

Cant resist from posting this. Superb melody from Yuvan (film: deepavali) with some good lyrics from Yugabharathi and an excellent singing by Vijay Yesudass. Dont miss it.



கேட்டு ரசிக்க
Kaadhal Vaithu

படித்து ரசிக்க

[பல்லவி]

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்


காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகால் அய்யோ தொலைந்தேன்


[சரணம் 1]

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை

நேரில் உன்னையே பார்த்தபின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்

அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்


[சரணம் 2]

உன்னை கண்டநாள் ஒளிவட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்

மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில்கூட ரசிக்க வைத்தாய்

Wednesday, January 10, 2007

இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்

லட்சம் வார்த்தைகளில் இருந்து
எழுதிக்கொண்டு வருகிறேன்
நான்

ஒரே பார்வையில்
எரித்து விடுகிறாய்
நீ

ஆயிரம் முறை ஒத்திகைக்கு
பிறகு சொல்கிறேன்
நான்

மறந்தும் கூட யோசிக்காமல்
மறுத்து விடுகிறாய்
நீ

இரவு பகலாய் கோயில்
வாசலில் குடியிருக்கிறேன்
நான்

பார்க்காமலேயே பணம்
போட்டுவிட்டு போகிறாய்
நீ

யுகம் யுகமாய்
உன்னோடு இருக்கிறேன்
நான்

ஒரு நிமிடம் கூட
ஒட்டாமல் இருக்கிறாய்
நீ

நூறு முத்தங்களில்
சொல்லிவிடுவேன்
உனக்கான என்
காதலை

உன் ஒற்றை கண்ணீர்த்துளி
சொல்லிவிடுகிறது
எனக்கான உன்
மறுப்பை

பி.கு: இதை படித்த பிறகும் உயிரோடு இருப்பவர்கள் comment போட்டுவிட்டு செல்லுங்கள்.

யாருப்பா அது. பட்டம் மேல எல்லாம் எனக்கு ஆசையில்லை. என்னது கவிப்பேரரசு, கவிச்சக்ரவர்த்தி, கவிக்கம்பன், கவிப்புலி, கவிசிங்கம் பரணியா. போதும் போதும் இத்தோட நிறுத்திக்குவோம்.

okie...okie...நீங்க எல்லாம் ஒன்னு கூடி எனக்கு வீடு கட்றதுகுள்ள me escape :)

Sunday, January 07, 2007

காதல் collage

கவிதையாய்
வாழ முடியவில்லை
கவிதை எழுதி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
------------------------------------------------------------------------------
காதல்
தேவதைகளுக்கு பாஸ்மார்கையும்
தேவதாஸ்களுக்கு டாஸ்மாக்கையும்
கண்டிப்பாக தந்துவிடுகிறது
------------------------------------------------------------------------------
எனது கவிதையின்
முதல் வரி நீதான்
மொத்த கவிதையும்
ஒரே ஒரு வரிதான்
------------------------------------------------------------------------------
காதல் என்றால் என்ன?
நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன்கள் நம்மை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்குகிறதே அது தான் காதல்.
------------------------------------------------------------------------------

P.S: இதையெல்லாம் நான் எழுதி இருக்கமாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். வேலையில்லாத யாரோ எழுதினத வேலையில்லாததுனால சுட்டு blog-ல போட்டது தான் என்னோட வேலை.

Wednesday, January 03, 2007

புலி பார்த்து பூனை...

"கலி முத்தி போயிடிச்சி ஆண்டவான்னு யோசிக்கிட்டே 'congrats-da bharani ambi'. "
"thanksங்கண்ணா. எல்லாம் நீங்க கொடுத்த inspirationதான். "
"என்னது நான் கொடுத்த inspirationஆ. என்னடா சொல்ற? "
ஆமாங்கண்ணா. Priyaல இருந்து எல்லாரும் உங்களை குழந்தை குழந்தைன்னு கூப்படறாங்களா. ஒரு பெரியவரை எல்லாரும் குழந்தைன்னு கூப்படுறதுனால அவருக்குள்ள ஏற்படுற ரசாயன மாற்றத்தை base பண்ணி தான்ணே இந்த கதையே எழுதினேன்.
"போடா.... உனக்கு என் மேல பொறாமை"

"நான் இடம் மாற்றம், பணி மாற்றம்ன்னு கொஞ்சம் busyஆ இருந்துட்டேன். actually நான் எழுதின செய்யுள் எல்லாம் collect பண்ணி அருணின் அட்டகாசங்கள்ன்னு ஒரு தொகுப்பு போட போறேன். அப்ப பாருங்க நான் யாருன்னு"

bala, gopal, indianangel, marutham எல்லாரும் "busyயா இருக்கோம், இந்த மாதிரி மொக்க விஷயத்துக்கெல்லாம் நேர்ல வர முடியாதுன்னு" ஒரு mail மட்டும் தட்டிடாங்க.

"நாம எப்படி பழகி இருக்கோம். என்கிட்ட கதை எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லையே".
"சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க dreamzz அவர்களே. "
"இந்த பக்கமே தலை வச்சி படுத்து இருக்கமாட்டேன். என்னால இதெல்லாம் தாங்க முடியாதுடா சாமி. நான் உண்டு, என் கவித உண்டுன்னு இருக்கேன். என்னை அப்படியே வுட்டுங்கப்பா"

"Congrats bharani. I know you will do it."
"filbert என்ன வச்சி comedy கீமடி எதுவும் பண்ணலயே"

"hey bharani கலக்கிட்டீங்க. நான் கூட 25 post போட்டுடேன். எனக்கு இந்த idea தோனலியே. ok. அடுத்தது அப்ப கதைதான். அதுக்கு முன்னால, இதுக்கு ஒரு treat. "
"அதுக்கென்னா குடுத்துட்டா போச்சி. உங்களுக்கு இல்லாத treat-ஆ g3"
"என்னது treat. நீங்க குடுக்க போறீங்க. அதை நான் நம்பணும். இப்படி சொல்லி சொல்லியே இது வரைக்கும் 100 treat pending. மவனே ஒன்னு நீ treat தர, இல்ல என்னோட treakகாச்சும் வந்து கட்டிட்டு போ"

"அவன் அவன் பாகம் பாகமா கஷ்டப்பட்டு கதை எழுதிக்கிட்டு இருக்கான். அவனுக்கெல்லாம் விட்டிட்டு."
"என்ன சொல்லிறீங்க gils. ஒன்னும் புரியலையே"
"இரு நான் போயி முதல்ல பார்த்த ஞாபகம் இல்லையோவ முடிக்கிறேன். அப்ப புரியும்."

"அடப்பாவி மாப்ள, உன்னை நம்பி நிதியமைச்சரா போட்டதுக்கு, எவ்ளோடா லஞ்சம் குடுத்த? "
"என்ன மாம்ஸ், என்ன சொல்றீங்க? "
"அடப்பாவி, அரசு கஜானாவை சுத்தமா தொடச்சிட்டியேடா, அடுத்த வேளை ஆட்சி எப்படிடா நடத்துறது. இப்பவே பொதுகுழுவை கூட்றேன். மாப்பு வச்சிடியேடா ஆப்பு"

"நான் ஏற்கனவே dipika இந்தியாவ விட்டு போக போறான்னு துக்கத்தில இருக்கேன். இதுல இப்படி ஒரு news சொல்லி என்னை total upset பண்ணிட்டீங்களே. இந்த semester நெலமை ரொம்ப கவலையா இருக்கு கடவுளே - bsk ஏன் உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது"

"கலக்குற பரணி. இந்த கதை bird watching பத்திதானே. எனக்கு குடுப்பா. tips எதாச்சும் இருந்தா use பண்ணிக்கிறேன்."
"குருவே உங்களுக்கா. why torch for sun. இதுல உள்ளது எல்லாம் நீங்க குடுத்த tips தான்."
"அதான பார்த்தேன். kkவா கொக்கா. ஹா....ஹா.....ஹா"


"US வந்த உடனே current இல்லாம நானே shockல இருக்கேன். இதுல இன்னொரு shocking newsஆ. என்னால தாங்க முடியாதுடா சாமி. பொற்கொடி உனக்கு என்ன போதாத நேரமா, where is my ரங்கமனி, இந்த சின்னபொண்ண காப்பாதுங்க"

"what is this bharani. again you have written in tamil. நாலு line தமிழ்ல படிக்கவே ரொம்ப கஷ்டப்படுறேன். இதுல full book-a. OMG Prithz. மத்தவங்க எல்லாம் ரொம்ப புகழ்றத பார்த்தா, அவ்ளோ கஷ்டபட்டு இத அவசியம் படிக்கனுமா என்ன?"
"if you are not studing this book, you are missing something."

"hey bharani, வழக்கம் போல கலக்கிட்டீங்க. "
"என்ன இருந்தாலும் priya, உங்க கண்ணாளனே மாதிரி வராதுங்க. எல்லாம் அந்த inspiration தான். "
"நான் கூட கண்ணாளனே தான் final list-ல இருக்குன்னு கேள்வி பட்டேன். ஆனா அதுக்குள்ள ஏதோ orkuttu, சாரி உள்குத்து நடந்து இருக்கு. தலைவர் சொன்ன மாதிரி நீங்கதான் ஏதாச்சும் பண்ணுனீங்களோ. "
"நீங்க வேற, அசின் double act பண்றாங்கன்னு எல்லா பணத்தையும் தசாவதாரதுக்கு sponser பண்ண சொன்னதே தலைவர்தாங்க. இதெல்லாம் அரசரகசியம். பொது கூட்டத்தில பேசுவோம். அப்பொழுது உண்மைகள் வெளிவரும் என்பதை இந்த நேரத்திலே சொல்ல கடமை பட்டு
இருக்கிறேன். "
"எப்படியோ மாமாவும் மாப்ளயும் சேர்ந்து கண்ணாளனேவ காணாம பண்ணிட்டீங்க. நல்லா இருங்க. "

"ஹாய்டா, கலக்கிட்ட. கதை எல்லாம் எழுதற. எப்படிடா. "
"அது தெரியாமதான் நானே முழுச்சிகிட்டு இருக்கேன் ரம்யா."
இது கூடவா தெரியல. என்னோட friend ஆயிட்டல்ல அதான்.
"அப்ப நீயும் என்ன மாதிரி super-அ கதை எழுதுவியா. "
"ஆமாம். ஆனா நான் எழுதற கதைய எல்லாரும் படிப்பாங்க. ஹி...ஹி"

SKM மேடம் அப்படியே எட்டி பார்க்கறாங்க. "இந்த பய மட்டும் அடங்கவே மாட்டேங்கறானே. நாட்ல யார் யாரயோ encounter-ல போடுறாங்க. இவன் blog எழுதறேன்ற பேர்ல எல்லாரையும் கொல்றானே அதுக்கெல்லாம் encounter இல்லாயா"ன்னு யோசிக்கிட்டே silent-ஆ போயிடராங்க.

திடீர்ன்னு ஒரு trunk call...

"வாழ்த்துக்கள் நண்பா. யார் என்ன சொன்னலும் நான் இருக்கேன் உன்னோட supportக்கு. நீ கலக்கு.
"thanks sasi. இப்பதான் கொஞ்சம் தையிரியமா இருக்கு. இந்த நேரத்தில நீ பழநில இருக்கியே. "
"இதோ இப்ப கிளம்பி வரேன். "

"சாகித்ய அகாதெமிய என்ன சைதாப்பேட்டை figures-ஆ நடத்தறாங்க. "
"ஏன் நாட்டாமை இப்படி ஒரு சந்தேகம். "
"இல்ல உனக்கு எல்லாம் குடுக்கறாங்களே அதான். PTI பசங்க nite அடிச்ச சரக்கு தெளியாம எதாச்சும் உளறியிருப்பாங்க. நீ இதையெல்லாம் பெருசா எடுக்காத. நாட்டாமை நான் இருக்கும் போது வேற யாருடா wrong தீர்ப்பு சொன்னது. தோ வரேன். "

"டமால்"ன்னு ஒரு சத்தம். திடீர்ன்னு கண் முழிச்சி பேய் முழி முழிக்கிறான் பரணி. பார்த்தா

"என்ன பரணி, தமிழ் வகுப்புல அதுவும் என்னோட வகுப்புலயே தூங்கறியா. படவா. "
"இல்லீங்க வேதா மேடம். ஒரு சூப்பர் கனவு."
"வகுப்புல தூங்கறதே தப்பு. இதுல கனவு வேறயா. என்னப்பா அது. "
"நான் எழுதின கதைக்கு சாகித்ய அகாதெமி award குடுத்து இருக்காங்க. "
"அடப்பாவி.
நாளைக்கு வகுப்புக்கு வரும்போது அ-னா, ஆ-வன்னா 10 தடவை imposition எழுதிட்டு வா."

பி.கு: இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் கற்பனை அல்ல. ஆனால் அவர்களின் கருத்துகள் எல்லாம் சுத்தமான 100% அக்மார்க் கற்பனை. ஹி....ஹி....ஹி

Monday, January 01, 2007

Happy New Year

என் இனிய blog மக்களே,

Wishing you all a Very Happy & Prosperous New Year.

புது வருஷம். புது pickupகள், புது dropகள், புது getupகள், புது setupகள், புது நண்பர்கள், புது எதிரிகள், புது வரவுகள், புது செலவுகள் எல்லாம் உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டதாகவும், உங்கள் budgetக்கு உட்பட்டதாகவும் இருக்க என்னோட வாழ்த்துக்கள்.

singleஆ இருக்கறவங்க mingleஆக பாருங்க. team memberஆ இருக்கறவங்க project leadஆக பாருங்க. leadஆ இருக்கறவங்க CEO ஆக பாருங்க. இந்த companyல இருக்கறவங்க அந்த company போக பாருங்க. அந்த நாட்டுல இருக்கறவங்க இந்த நாட்டுக்கு போக பாருங்க. வேலை இல்லாம வெட்டியா இருக்கறவங்க நல்ல பணக்கார மாமனாரா பாருங்க.

நம்ம தலைவர் சொன்ன மாதிரி கணவு காணுங்க. கணவுல என்ன சின்ன கணவு, பெரிய கணவு.

உங்களுடைய ஆசைகள், கணவுகள், விருப்பங்கள், வேண்டுதல்கள் அனைத்தையும் இன்றே, இப்பொழுதே நிறைவேற்றிட அந்த ஆண்டவனுக்கு ஒரு urgent amendment போடுகிறேன்.

பவ்யமுடன், (பாவனாவுடன்னு தப்பு தப்பா படிக்க கூடாது)
பரணி

பி.கு: இது ஒரு post dated post. So Jan 1st அன்றுதான் அமலுக்கு வரும் :)