Monday, December 04, 2006

இதனால் சகலமானவர்களுக்கும் ...

I am taking a short non-commercial break from blogging.

Correct. Correct. நீங்க கேட்கறது கேட்குது.

இதனால,

மக்களோட வாழ்க்கை தரம் உயரப்போறதில்லை. ரேஷன் கடையில அரிசி, சர்க்கரை எல்லாம் சரியா கிடைக்க போறதில்லை. தேவையான நேரத்தில் தேவையான அளவு மழை பெய்ய போறதில்லை. வீட்டுக்கு ஒரு கலர் டிவி கொடுக்கறவங்க அதுக்கு பதிலா வீட்டில் ஒருத்தருக்கு வேலை தரப்போறதில்லை. முல்லை பெரியார் விவகாரத்தில் முடிவு கிடைக்கபோறதில்லை. அட atleast சிம்புவும் அவங்க அப்பனும் நம்மள கொல்லாம விடப்போறாங்களா. அதுவும் இல்லை.

ஆனா,

நீங்க எல்லாரும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம். உங்களை மொக்க போட ஒரு ஆள் கம்மியா இருக்கும். உலக அமைதி கிடைக்கும்.

ஏன் இந்த டகால்டி?

எந்த ஒரு வேலைக்கும் ஒரு சின்ன break தேவைதானே. இல்லையென்றால் அந்த வேலை செய்வதில் உள்ள சந்தோஷம் போய் அது ஒரு சடங்காக மாறிவிடும். அதற்காகவும், personal மற்றும் career வேலைகள் சில பல pending இருப்பதாலும், அதை எல்லாம் முடித்து கொண்டு திரும்பலாம் என்பதற்காகவும் எடுத்த முடிவுதான் இது.


இதுதான் சாக்குன்னு நம்மள யாரும் மறந்துடாதீங்கப்பா. கொஞ்ச நாள் கழித்து திரும்பி வரும்பொழுதோ அல்லது உங்கள் வலைப்பக்கம் வரும்பொழுதோ "யாருடா நீ"-ன்னு கேட்டுடாதிங்க. நமக்கு சின்ன heart. அது இடியெல்லாம் தாங்காது.


வாழ்க்கை என்பது
வட்டப்பாதை
மீண்டும் சந்திப்போம்

Sunday, December 03, 2006

சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்



ஒரு ஆயிரம் கோடிகள்
யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட
காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

courtesy: indiaglitz