Monday, December 04, 2006

இதனால் சகலமானவர்களுக்கும் ...

I am taking a short non-commercial break from blogging.

Correct. Correct. நீங்க கேட்கறது கேட்குது.

இதனால,

மக்களோட வாழ்க்கை தரம் உயரப்போறதில்லை. ரேஷன் கடையில அரிசி, சர்க்கரை எல்லாம் சரியா கிடைக்க போறதில்லை. தேவையான நேரத்தில் தேவையான அளவு மழை பெய்ய போறதில்லை. வீட்டுக்கு ஒரு கலர் டிவி கொடுக்கறவங்க அதுக்கு பதிலா வீட்டில் ஒருத்தருக்கு வேலை தரப்போறதில்லை. முல்லை பெரியார் விவகாரத்தில் முடிவு கிடைக்கபோறதில்லை. அட atleast சிம்புவும் அவங்க அப்பனும் நம்மள கொல்லாம விடப்போறாங்களா. அதுவும் இல்லை.

ஆனா,

நீங்க எல்லாரும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம். உங்களை மொக்க போட ஒரு ஆள் கம்மியா இருக்கும். உலக அமைதி கிடைக்கும்.

ஏன் இந்த டகால்டி?

எந்த ஒரு வேலைக்கும் ஒரு சின்ன break தேவைதானே. இல்லையென்றால் அந்த வேலை செய்வதில் உள்ள சந்தோஷம் போய் அது ஒரு சடங்காக மாறிவிடும். அதற்காகவும், personal மற்றும் career வேலைகள் சில பல pending இருப்பதாலும், அதை எல்லாம் முடித்து கொண்டு திரும்பலாம் என்பதற்காகவும் எடுத்த முடிவுதான் இது.


இதுதான் சாக்குன்னு நம்மள யாரும் மறந்துடாதீங்கப்பா. கொஞ்ச நாள் கழித்து திரும்பி வரும்பொழுதோ அல்லது உங்கள் வலைப்பக்கம் வரும்பொழுதோ "யாருடா நீ"-ன்னு கேட்டுடாதிங்க. நமக்கு சின்ன heart. அது இடியெல்லாம் தாங்காது.


வாழ்க்கை என்பது
வட்டப்பாதை
மீண்டும் சந்திப்போம்

Sunday, December 03, 2006

சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்



ஒரு ஆயிரம் கோடிகள்
யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட
காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

courtesy: indiaglitz

Thursday, November 30, 2006

பாட்டு மச்சி பாட்டு

Another superb song (Poo poovaai from bala) from Yuvan. This song is not as much popular as other songs(en kannai thirudikol penne, theendi theendi) in this movie, but extremely superb melody. As usual excellent singing by Unnimenon, supported by some fantastic lyrics.

கேட்டு ரசிக்க
http://www.musicplug.in/songs.php?movieid=817

படித்து ரசிக்க

பல்லவி

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புதுக்கவிதை

தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கைக்குழந்தை

புல்வெளியினில் நீ போனால்
வெண் பனித்துளி கால் கீறும்

நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஓர் துடிப்பே

சரணம் 1

எங்கள் இல்லத்திலே இவள் நாடகம்தான்
இங்கு தேவையில்லை தொலைக்காட்சி


எங்கள் உள்ளத்திலே தினம் பூமழைதான்
நாங்கள் செல்லவதில்லை மலர்க்காட்சி

மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க

வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அதட்டும் இனிமை ரசிக்க


கால் கொண்ட ரோஜா
துள்ளி துள்ளி வந்து
தூனுக்கு பின்னால் நின்று
சிரிக்கிறதே

[பூ பூவாய்..]

சரணம் 2

தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே
யார் போர்வை என்று அடம் பிடித்தோம்

மொட்டை மாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வைத்து உயிர் ருசித்தோம்

ஒரே ஒரே மின்விசிறி
அதன் அடியில் தூங்கி கிடப்போம்

இன்னும் இன்னும் தந்தை தோளில்
சிறு குழந்தையாக இருப்போம்

பூமியில் சொர்க்கம்
உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது
எங்கள் இல்லமே


[பூ பூவாய்..]

Tuesday, November 28, 2006

அடுத்தது என்ன

அடுத்தது என்ன-னு யோசிக்க தேவையில்லாம Tag எழுத சொன்ன தோழி பிரியா அவர்களுக்கு thanks சொல்லிக்கொண்டு.......start music....

பிடிச்ச வாசனைகள் மூணு...

1. புதுசா ஒரு book வாங்கி பிரிச்சி முகரும் போது வரும் paper வாசனை. (கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுதோ இல்லையோ paper வாசனை கண்டிப்பா தெரியும்னு நினைக்கிறேன்)

2. biscuit factory-ya cross பண்றப்ப வரும் வாசனை. (எந்த biscuit-லயும் அந்த வாசனை வருவதேயில்லையே ஏன்)

3. Eucalyptus மரத்தில இருந்து வரும் வாசனை

பிடிக்காத வாசனைகள் மூணு...

1. சிகரெட்

2. அதை பற்ற வக்க கொளுத்தும் தீக்குச்சி

3. பற்ற வைப்பவர் பேசும் போது வரும் கப்பு

பார்த்த(பார்த்து கொண்டிருக்கும்) வேலைகள் மூணு...

1. site அடிப்பது

2. ஜொள்ளுவது (first-க்கும் second-க்கும் difference இருக்கு)

3. முதல் இரண்டும் செய்தது போக நேரம் இருந்தால் வாங்குற சம்பளத்துக்கு office computer-ஐ முறைப்பது

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூணு...

1. இதயத்தை திருடாதே (பயங்கர normal movie....but i love to see it again and again)

2. காதல் கவிதை (காதல் கோட்டை மாதிரி ஒரு மொக்க படத்த எடுத்த அகத்தியனோட கொஞ்சம் super படம்)

3. All feel good movies

மறக்க முடியாத நினைவுகள் மூணு...

மறக்க நினைக்கிற எல்லா நினைவுகளுமே மறக்க முடியாத நினைவுகள் தான்.(எப்படிடா பரணி உன்னால மட்டும்......)

பார்க்க விரும்பும் வேலை மூணு...

ஊரு பக்கம் போயி விவசாயம் பார்க்கனும்....அதான் நான் பார்க்க விரும்பும் ஒரே வேலை

செய்ய விரும்பும் செயல்கள் மூணு...

1. daily ஒரு friend வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வரனும்

2. எதை பற்றியும் யோசிக்காமல் தூங்கனும்

3. office போகாம வீட்ல இருந்தே work பண்ணனும்

சாப்பிட விரும்பும் உணவு மூணு...

பாசமா யாராச்சும் சமைத்து போட்டா மூணு என்ன முன்னூறு உணவு சாப்பிடுவான் பரணி

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூணு...

1. சொந்தமாக ஒரு வீடு வாங்கி அதில் ஒரு நாளாவது இருக்கனும்

2. சந்தோஷமா இருக்கும் போது நிறைய பேர் இருக்கும் இடம்

3. சோகமா இருக்கும் போது தனியா இருக்கும் இடம்

என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூணு...

தொட்டதுக்கெல்லாம் அழும் படு பயங்கரமான sensitive ஜீவராசி நான்.

P.S: இத இன்னும் மூணு பேருக்கு tag பண்ணி வாங்கி கட்டிக்க எனக்கு விருப்பமில்லை. So Ensaaaay மக்களே !!!!

Monday, November 20, 2006

blog-ல் மரம் வளர்க்கும் திட்டம்

ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி அப்படின்னு சொன்ன காலம் போயி, எங்கப்பன் blog-ல மரம் வளர்த்தான்னு என் பொண்ணோ, பையனோ சொல்றதுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த வேதா அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த திட்டத்தை யார் ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. ஆனா ஆரம்பிச்சவங்க உயிரோட இருந்து இதை படிச்சாங்கன்ன கண்டிப்பா தூக்கு மாட்டிப்பாங்க. என்ன பன்றது, விதி வலியது.

இதுக்கு rules எல்லாம் இருக்காம். நாம boys. so break the rules. To read the rules click here

//வேதா எழுதினதுக்கு முன்னாடி.....

The Unusual Endings
“It was rather strange”, he muttered to himself as he pondered on what had been happening for the past three days, while walking out of the arrogant Italian, Vencelli Darpkink’s 19th century office, which was home not only to its proprietor but also to pugent odours and queer looking sapiens from time to time.Meera Dias, was the name. They had first met when things were quite off note. “Lagos wasn’t a place for summer spots”, he had warned her. What he heard now was troubling him even more. Congo was not something he had suggested either."Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard... //

இது வேதா அவங்க எழுதினது (இந்த பதிவோட ஒரே உருப்படியான விஷயம்)


மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இனி நாம எழுதவது (கதை எழுதுவதை காதலிப்பவர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது, ஏன்னா இந்த கதை(???) அவங்க ஜீரனத்துக்கு ஆகாது)

சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

நழுவின தொலைப்பேசி, கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரின் தலையில் "நச்" என்று அடித்தது.

எரிச்சலுடன் கண்விழித்த சுந்தர், தொலைப்பேசியை எடுத்து, "telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான்.

திகிலில் இருந்த சூர்யா, "டேய் phone-ல மீரா-டா" என்றான்.

"யாரு மீரா ஜாஸ்மினா, அவங்களுக்கும் s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல."

"டேய் அந்த மீரா இல்லடா"

"பின்ன, P.C Sriram-வோட மீராவா"

"என்ன கொலைக்காரன் ஆக்காத. என் கதையில வராளே அந்த மீரா"

"சர்தான். நேத்து nite-ஏ சொன்னேன் உன்கிட்ட, raw-வா அடிக்காத, உனக்கு தாங்காதுன்னு. இப்ப பாரு இன்னும் தெளியல".

"சனியனே, நான் தெளிவா தாண்டா இருக்கேன். line-ல இருக்கா நீயே பேசு".

சுந்தர் receiver-அ வாங்கி mouthpiece-ஐ காதுல கொடுத்து "அலோ" என்றான் வடிவேலு style-ல்.

டென்ஷனான சூர்யா, "நீ தெளிவா receiver-அ புடி" என்று மாற்றிக்கொடுத்தான்.

சுந்தர் மீண்டும் "அலோ" என்றான்.அந்த பக்கம் இருந்து சத்தம் ஏதும் இல்லை.

ஓரு பாடல் மட்டும் மெல்ல கசிந்து வந்தது.

"ரா ரா....."

P.S: யப்பா சாமி, டங்கு டணால் ஆகிபோச்சி.

இத இப்படியே விட மனசில்லை. அதனால நம்ம சென்னை தோஸ்துகள் சசி (certifiation எல்லாம் முடிச்சிட்டு வந்து ஜாலியா எழுதுங்க) , g3 (ஹி..ஹி...office-ல இருக்கும் போது எழுதுங்க) , பொற்கொடி(நீங்க பயங்கர busy-ன்னு தெரியும், இருந்தாலும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சாச்சும் எழுதுங்க) மூனு பேரும் தொடர்ந்து வளர்ப்பாங்க.

Thursday, November 16, 2006

சில உளறல்களும் சில புலம்பல்களும்

நொடி நேர வானவில்லிற்கெல்லாம்
நேரம் ஒதுக்குவதில்லை
நான் நிலா ரசிகன்

நீ
என் இரவின் கனவில்
வந்த பகலில்
கண்ட கனவு

உன்னை
எப்பொழுதும் முதன்முதலாய்
பார்த்து கொண்டிருக்கிறேன்

வருகிறாய் தான்
என் சிறகை நனைக்க
மழையாகவும்
என் கூட்டை கலைக்க
புயலாகவும்

வேண்டும் வேண்டாம்
என்பதில்
முடிகிறது வாழ்க்கை

Courtesy: Vikatan

P.S: "ஏண்டா டேய், உனக்கு சொந்தமாவே எழுத தெரியாதா. எப்ப பாரு அங்க படிச்சது, இங்க கேட்டது, அவங்க பாடினது, இவங்க எழுதினதுன்னு சொல்லிறியே தவிர நீ எதாச்சும் சொந்தமா எழுதினியான்னு" நீங்க பாசமா கேட்கறது எனக்கு கேட்குது.

ஆனா என்ன பன்ன....முடியல...முடியல....எவ்ளோ நாள் தான் நானும் எழுத தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது....

உங்க கதை, கவிதைகளை படித்து ரசிப்பதோடும், உங்க வாழ்க்கையில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை படித்து அதனோடு என்னோட வாழ்க்கையை இனைத்து பார்த்து கொள்வதோடும், உங்க லொல்லையும் ரவுசையும் படித்து சிரிப்பதோடும், உங்க பதிவில் வரும் "நல்ல" படங்களை பார்த்து ஜொள்ளுவதோடும், உங்க சமூக கோபங்களுக்கு என் ஆதரவை தெரிவிப்பதோடும், உங்களுடைய எல்லா கருத்துக்களுக்கும் ஒரு 'ஓ' போடுவதோடும் முடிந்து விடுகிறது இந்த வலைப்பதிவின் பிறவிப்பயன்.

இதற்கு மேல் நான் ஏதாவது செய்தால் அது கண்டிப்பாக ஒரு உலக சாதனைக்கான முயற்சிதான்.

Tuesday, November 14, 2006

Happy Birthday

திடீர்ன்னு ஆஜராகி என் மானத்தை கப்பலேத்துவதற்காகவே comment போடுகிற தோழி திவ்யாவிற்கு இன்று பிறந்தநாள்.

Helping tendency, standing by friends in their tough time marks her attitude. US-la இருக்கும் போது அப்ப அப்ப நல்ல சாப்பாடு எடுத்துத்து வந்து கொடுத்து புண்ணியம் தேடிக்கிட்டவங்க.

Divyah, Wishing you a very very Happy Birthday(நீங்க ஆசைபடுற மாதிரியே ஒரு நல்ல பையன் உங்களுக்கு வாக்கப்பட என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்).

மக்களே நீங்களும் வாழ்த்திட்டு போங்க.

Sunday, November 12, 2006

சென்னையில் ஒரு 'பயங்கர' மழைக்காலம்






கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு
கொண்டாட கண்டுபிடிச்சோம்
சென்னை-ன்னு ஒரு தீவு


Pictures Courtesy: The Hindu
Hykoo Courtesy: Raasathesingu

Friday, November 10, 2006

50 hours extended travel = Eiffel Tower dharisanam

This is what happened.

My flight from Atlanta to Paris got delayed. So i missed the connecting flight from Paris to Chennai. They gave me ticket for Paris to Mumbai on the next day flight. France transit visa was rejected by french police, first time. So airport-laye thevudu kaathen. Then at the end of the day, we asked for visa again and it got approved (Oru friend kaikuzhandayoda irundhaanga...avanga punniyam). Went to hotel at around 6. Enquired about Eiffel tower. Oru 40 minutes agaunu sonnaga. Udane pudi cab. Vaazhkayila idhai parka ellam namba kasu selavupanniya poga porom. Never.

Appa sutta padangalil konjam...

Naan ponenu neenga nambanum illa :)

Namma Eiffel

Avar kattina tower...avar-na avar mattum illenga....niraya per serndhudhaan katinaanga :)

P.S: Vaazhga delta airlines-oda service. Ippadi flight ellam delay panradhula evlo nalladhu nadakuthu...

Thursday, November 09, 2006

Bharani's Fact Book

நம்
தமிழ் பெண்கள் வைக்கும்
ஒற்றை விபூதி தீற்றலின்
அழகிற்கு
ஈடில்லையாம்
ஆயிரம் அமெரிக்க பெண்களின்
அழகு

P.S: Onnung Keezha onnu irukarathunaala idhai pudhu kavidhai-nu neenga nenacha aduku naan porupileengo. Its a straight forward jo...che fact :)

Wednesday, November 08, 2006

Vandhutaanya Vandhutaan

Idly
Ketti Chutney
Kumudam
Vikatan
Saidapettai
Chidambaram
Radio Mirchi...Idhu sema hot-u machi...
Nayar, oru 1/2 special...
2.50 silrai irundha vandiyila yeru...
Auto...auto....
Meteruku mela 10 rooba agumba....
Dei kasumaalam, uttanda sollitu vanthutiya....

Sorgam

Friday, October 27, 2006

நான் என்ன சொல்ல வரேன்னா

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள
சொர்க்கம் இருக்கு

அட சின்ன சின்ன அன்பில்தானே
ஜீவன் இன்னும் இருக்கு


Going Home. Catch You All From The Livelier Chennai :)

Thursday, October 26, 2006

பாட்டு மச்சி பாட்டு

This is a superb song (Ettil Azhagu from Poo Parika Varugirom) from Vidyasagar, composed when he was not famous. I personally feel that VS gave best of songs when he was not so popular. Now he has lost his touch after becoming so famous.

கேட்டு ரசிக்க...


Powered by Castpost

படித்து ரசிக்க...

பல்லவி

எட்டில் அழகு பதினெட்டில் அழகு
எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு

பெண்ணின் அழகே உச்ச அழகு
பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு

ஆடை அழகு பாதி அழகு
அந்த சொல்லை மாற்றியது பெண்ணின் அழகு

பெண்ணை கொண்டு கூடியது மண்ணின் அழகு

சரணம் 1

உதட்டை மூடி சிரிப்பதழகு
உதிரிப்பூக்கள் தொடுப்பதழகு

மணநாள் குறித்ததும் தேதி தாள்களை திருப்பி பார்ப்பது ஓர் அழகு

வானொலியோடு பாடும் அழகு
பாடிக்கொண்டே சமைப்பதழகு

தாமரை இலையில் நீர் அழகு
அட தாவணி பெண் போல் யார் அழகு


[எட்டில்...]

சரணம் 2

பின்னல் ஜடையை பிரிப்பதழகு
தன்னை தானே ரசிப்பதழகு

நல்ல ஆணின் அழகினை ரசிக்கும் பெண்களின் ஓர பார்வைகள் ஓர் அழகு

காதல் பெண்ணின் மிரட்டல் அழகு
ஹய்யோ ஹய்யோ அலட்டல் அழகு

ஒவ்வோர் பெண்ணும் ஒர் அழகு
அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு


[எட்டில்...]

P.S: பசங்களே இப்படியே ஜொள்ளிக்கிட்டே இருந்தோம்னு வச்சிக்கங்க
Year 2030: கடந்த ஐம்பதாண்டுகள் போலவே இந்த வருடமும் +2 தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் அதிக சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Thursday, October 19, 2006

தீபாவளி..தீபாவளி..தீபாவளி

எல்லாருக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கு, உங்க வீட்ல உள்ளவங்களுக்கு, உங்க ஒன்னுவிட்ட சித்தப்பாவோட பெரியப்பா பையனோட ரெண்டாவது பொண்ணுக்கு, உங்க மாமாவோட ரெண்டாவது மச்சானோட மூனாவது பையனுக்கு எல்லாருக்கும் சொல்லிடுங்க.

நீங்க சைட் அடிக்கிற, உங்களை சைட் அடிக்கிற, சைட் அடிச்சி அடிவாங்கின, சைட் அடிச்சவங்களோட கல்யாணுத்துக்கே போய் அட்சதை போட்ட தியாக செம்மல்களுக்கும், பகோடா சாப்டுறவங்க, பல் இல்லாதவங்க எல்லாருக்கும் சொல்லிடுங்க.

வீட்ல இருக்கற சிண்டு, சிமிழுங்க எல்லாம் வந்து தீபாவளி வாழ்த்து வாங்கிக்கங்க.

அப்புறம் நாள மறுநாள் வந்து பரணி வாழ்த்து சொல்லலன்னு குறை பட்டுக்ககூடாது...ஆமாம்.

உள்ளூர்ள்ள இருக்கறவங்களே, யூஎஸ்-ல இருக்கறவங்களே, ஊருக்கு போறவங்களே, லீவ் கெடைக்காம போறவங்கள பார்த்து வயிறு எறியறவங்களே, எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பாத்து பத்திரமா வேட்டு வையுங்க (அடுத்தவங்களுக்கு இல்ல). அந்த வேட்டோட உங்க கவலைகள் எல்லாம் வெடிச்சி சிதறிடனும்.

நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துங்க. அப்படியே மிச்சம் மீதி ஸ்வீட் இருந்தா இந்த பக்கம் கொஞ்சம் அனுப்பி வையுங்க

ஆவலுடன் எதிர்பார்த்து,
பரணி

என்னன்னு சொல்லறது

After reading the Anbe Sivam sequence in this post of Veda, i wanted to watch the movie again. So downloaded and watched today. I loved madhan's dialog in kamal-madhavan scenes.

See this scene, when kamal and madhavan waiting to catch the coromondal express...

K: இந்த மழையில எதாச்சும் ஒரு class-ல போய் சேர்ந்தா போதாதா
M: அட போங்க சார் நீங்க வேற, பணம் குடுத்தாகூட வசதி கெடைக்காத ஒரு நாடு இது. Thats India for you.
K: பணம் குடுத்தா எது வேணா, எப்ப வேணா கெடைக்கும் நெனைக்கிறவங்க இருக்கற வரைக்கும் that will be India for you.
M: ஆமா, உடனே உலகத்திலயே எல்லாத்தவிட நல்ல நாடு soviet union-னு சொல்லுவீங்களே.
K: இல்ல நீங்க அப்படி சொல்ல முடியாது.
M: அப்படி ஒத்துக்கங்க நீங்க. நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் soviet union ஒரு முழு நாடே இல்ல. ஒடஞ்சி சுக்கு நூறா போயிடிச்சி. இப்ப sovient union, sovient union-னே இல்லன்னா, communisum-e இல்லனு அர்த்தம் இல்ல அப்புறம் ஏன் அதை பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க
K: Mr. Romeo, இப்ப தாஜ்மகால் இடிஞ்சி போச்சின்னு வச்சிக்கங்க, நீங்க எல்லாம் love பண்றத நிறுத்திடுவீங்களா?
M: Ok. very clever, very clever. But Mr. Red ...Loveeee.... is a feeling
K: Communisum-um அப்படித்தான் ஒரு feeling. Karl Marx அதை பத்தி எழுதரதுக்கு முன்னாடியே பல பேருக்கு அந்த feeling வந்தாச்சி, ஆனா Karl Marx தான் அதை பத்தி எழுதினாரு. ஒரு தத்துவமா மாத்தினாரு. இதெல்லாம் பத்தி உங்ககிட்ட பேசக்கூடாது. முக்கியமா நீங்க அதபத்தி பேசக்கூடாது.
M: ஏன்?
K: ஏன்னா... train வந்துடிச்சி
M:ஓ. train வந்துடிச்சி...ஓ
(Madhavan walks some distance and comes back)
M: ம்ம்ம். நான் ஏன் கேக்ககூடாது?
K: சொன்னா தாங்குவீங்களா?
M: ofsourse go ahead and hit me
K: Because you are selfish coolie
M: Excuse me??
K: வெளிநாட்டு கம்பெனிகள் சம்பாரிக்கறதுக்கு tooth pastu, cool drinku, soapu இதெல்லாம் television-ல கூவி விக்கிறவர்தானே நீங்க
M: Mr.Sivam..that is my business...okie??
K: சரி business business-னு எல்லாத்தயும் வித்துடீங்கன்னா, இப்பவே அவன் மஞ்சள், பாஸ்மதில்லாம் தன்னுதுன்னு சொந்தம் கொண்டாடுறான். நீங்க பாட்டுக்கும் காசு குடுக்கறானேனு குனிஞ்சி குனிஞ்சி சலாம் போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு இருக்கறது முதுகு தண்டா, rubber துண்டான்னு சந்தேகம் வருமுல்ல
M:listen, dont get personal okie. ஒன் மூஞ்சியும் மொகரகட்டயும் வச்சிகிட்டு... ஒன் கை கால் வேற வெலங்கல... ஒனக்கு பயங்கரமான திமிரு தான்யா
K: இது மட்டும் personal இல்லயா
M: அது....ya..ya....you started it
K: சரி start பண்ணிட்டேன், முடிக்கனும் இல்ல..ஒன்னு சொல்றேன் கேட்டுக்கறீங்களா....கோவப்படாம
M: சொல்லுங்க
K: Sparrows pyramid கட்டினாங்க இல்ல அப்ப கல்லு சுமந்த அடிமைகளுக்கு சமானம் நீங்கல்லாம். Multinational company காரன் தூக்கி போடுற எலும்புதுண்ட...
M: பொறிக்கி திங்கிற நாய்ன்றீங்களா?

யாரோ செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சி

Tuesday, October 17, 2006

பாட்டு மச்சி பாட்டு

Found the downloadable version of this song (Vazhi Vidu from Paatu Paadavaa). Superb music by Illayaraja as usual and excellent singing by S.P.B.

Though i like illayaraja as a singer also, this is one song which he should have easily avoided singing and given to Yesudaas or some other singer. As SPB sings part of this song, illayaraja sounds little dull. IMO a small glitch of this song is illayaraja's singing, but who cares, he rocks in the tune and Vaali complements him in lyrics.

As usual for those who want to listen


Powered by Castpost

For those who like to read lyrics, here it goes

பல்லவி

வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்

விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்

எவன் அவன் வாசலை அடைப்பது
இடையினில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது

என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை

சரணம் 1

பனிமலர் விழிவழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள்..ஓ
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள்..ஓ

என் மீதுதான் அன்பையே பொய்மாரியாய் தூவுவாள்
என் நெஞ்சயே பூவென தன் கூந்தளில் சூடுவாள்

நாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே

நாளும் சிங்கார தேரை நான் கூட...

[வழி விடு]

சரணம் 2

மனநிலை சரியில்லை பாவம் என்று பாசங்கள் காட்டுவாள்..ஓ
மருத்துவன் ஒருவனும் ஆற்றிடாத காயங்கள் ஆற்றுவாள்..ஓ

பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே பூபாலமாய் பாடுமே

ஓர் நாள் அவள் வாராவிடில் என் பார்வை தூங்கிடாது
நான் வாழவே வான்நீங்கியே முன் தோன்றும் தேவமாது

ஆடை மேல் ஆடும் பூவை நான் காண...

[வழி விடு]

Monday, October 16, 2006

Pudhiya Thathuvam 10001

Never lie, steal, cheat or drink.

If you must lie, lie in the arms of one you love.
If you must steal, steal away from bad companies.
If you must cheat, cheat death.
If you must drink, drink in the moments that take your breath away.

Courtesy: 800BC-yila vaazhnda oru periya mahaan. Have a blasting week ahead. Diwali varudhula adhan :)

Saturday, October 14, 2006

Random Picks

Love your friends not their sisters.
Love your sisters not their friends.

********************************

A man got 2 wishes from GOD.
He asked for the Best wine and Best Woman.
Next moment, he had the Best Wine and Mother Teresa next to him.

Moral : BE SPECIFIC

*******************************

If you do NOT have a Girl Friend - You are missing SOME thing in your life.
If you HAVE a Girl Friend - You are missing EVERY thing in your life.

********************************

P.S: Picked from a fwd from a friend. Have a great weekend guys :-)

Thursday, October 12, 2006

கேட்டதில் பிடித்தது

இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம்
என்மேல் விழுந்து உடைந்ததே

கரும்பில் செய்த ஆயுதம் ஒன்று
என் உயிரை அறுத்ததே

மனது என்ற ஆயுதம் கொண்டே
மனித கூட்டம் வளர்ந்தது

மனது என்ற ஆயுதம் கொண்டு
தன்னை தானே வதைத்தது

P.S: Vattaram padathukaaga Vairamuthu ezhudhiyulla paathu idhu. Bharadwaj avar gemini-yila pota "Pennoruthi" paata konjam slow-a potu indha patta mudichitaru.

Nice song to listen....especially when you feel bored in office.

To listen to this song click here. On the loaded page click on the link "Idhu Kadhal Kadhal". A player page will get displayed. This will detect the player settings.... Ada pavingala...Code-a vida document adigam adika vachathoda effect-a paarunga :(

Monday, October 09, 2006

100வது பதிவு

பரணியின் 100வது பதிவிற்க்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். நான் பாவ்னா. பரணியின் புது P.A

100வது பதிவிற்க்காக பரணியிடம் ஒரு சிறிய பேட்டி. பேட்டி காண்பது நானும், அவரது மனசாட்சியும்

Ready. Start. Camera. Action

பரணி: நான் உங்களுக்கு மறைக்கிறேனா?

பாவ்னா: என்ன உளர்றீங்க?

ப: இல்லமா, camera-ல நான் உனக்கு மறைக்கிறேனானு கேட்டேன். ஹி..ஹி..ஹி

மனசாட்சி: டேய் டேய், வழியாதடா. இந்தா வாயை தொடச்சிக்க

பா: இந்த blog-அ ஏன் ஆரம்பிச்சீங்க?


ப: நல்ல கேள்வி. இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்கறதுனாலதான் நான் உன்னை P.A வா select செஞ்சேன். ஹி..ஹி..ஹி.

நான் இந்த blog-அ ஏன் ஆரம்பிச்சேன்னா அது என்னோட சின்ன வயசு ஆசை.

பா: ஆஆஆஆ

ம: டேய் டேய், எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க. சின்ன வயசுல குச்சி முட்டாயிக்கு ஆசபட்டேன். குருவி ரொட்டிக்கி ஆசபட்டேன்னு சொல்லு. அத வுட்டுட்டு blog-க்கு ஆசபட்டேன், bill gates பொண்ணுக்கு ஆசபட்டேன்னு சொன்ன கொலவுழும் மவனே.
college third semester C lab-la mouse புடிக்க தெரியாம பக்கத்தில இருக்கவரன் எப்படி புடிக்கிறான்னு பார்த்த மறந்துட்டியாடா??

பாப்பா பாரு பயந்து போயிடிச்சி. நீ அடுத்தத கேளும்மா.

பா: இந்த blog-oda purpose என்ன?

ப: ஒரு சிந்தனை சிற்பியோடா சிந்தனைகளை ஒரு சின்ன மூளைக்குள்ள அடைச்சி வைக்க எனக்கு விருப்பம் இல்லை.

ம: என்னது சிந்தனை சிற்பியா, அப்ப "ரகசியமானது காதல்" பாட்டு போட்டது நீதானா?

ப: டேய், நீ too much-ஆ பேசுற.
ம: நீ என்ன too much-ஆ பேசவக்கிற.

பா: ஆரம்பிச்சி ஒரு அஞ்சாறு மாசம், யாருமே படிக்காம blog-அ ஓட்டினீங்களாமே.

ப: அப்படின்னு யார் சொன்னது. ஒரு blog நடத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?. எவ்ளோ blog படிக்கனும், எவ்ளோ comments படிக்கனும், நாட்டாமை blog-la comments படிக்கறதுக்கே எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா, எவ்ளோ comments போடனும், first comment போட்டா மறக்காம புளியோதரையும், சுண்டலும் கேட்கனும், அப்படி கேக்களன்னா பிரியா அவங்களே சாப்ட்டுடறாங்க.....இவ்ளோ கஷடத்துக்கு நடுவுல நம்ம blog-ல post போடனும். ஒரு post , ஒரு post போட்டுபாரு அந்த கஷ்டம் தெரியும்.

ம: கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையேடா....

பா: எப்ப உங்களுக்கு comments வர ஆரம்பிச்சித்து

ப: நான் படுற கஷ்ட்த்த பார்த்துட்டு நண்பர் பாலா, முதல் comment போட்டு ஆரம்பிச்சி வச்சார். அந்த நல்ல நேரம், அதுக்கு அப்புறம் Karthik mams, country tortoise Syam, Filbert, karuthu kandamami Subha, MS, தெரிந்தும் தெரியாத Vaishav, தோழி சசி எல்லாருடைய நட்பும் கெடச்சது.

இப்ப அந்த வட்டம் பெரிதாகி, தோழர்கள் ambi, dreamzz, golmaal Gopal, Prasanna, deepikadiyaan Karthik தோழிகள் g3, பொற்கொடி, Prithz, Priya, Pavithra, Marutham, Oliveoyl ன்னு போயிட்டிருக்கு. அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

ம: இவங்க எல்லாம் போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணியிருக்காங்கடா....இல்லாட்டி இப்படி ஒரு சோதனை அவங்களுக்கு வருமா...

பா: எவ்ளோ குப்பயா எழுதினாலும், எல்லாரும் நல்லா இருக்குன்னு comment போடுறாங்களே, காசு கீசு குடுத்து comment போட சொல்றீங்களோ?

ம: ஹா ஹா ஹா. நல்ல கேள்வி. இது மாதிரி அறிவுபூர்வமா கேள்வி கேட்கற்துனாலதான் அவன் உன்னை P.A வா select செஞ்சியிருக்கான்.

ப: பாவம் புள்ளனு அவங்களா பாத்து நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போறாங்கம்மா . அன்பும்மா அன்பு !!!

பா: கடைசியா மக்களுக்கு எதாச்சும் சொல்ல விரும்பறீங்களா?

ப: இந்த வலைப்பதிவை படித்த, படிக்கும், படிக்க போகும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் பல.

ம: போட்டாண்டா ஒரு senti...இதனால தாண்டா நீ உயிரோட இருக்கே.